இரண்டு நாளைக்கு சென்னைக்கு வராதீங்க..!மழை களத்தில் முதலமைச்சர்!

இரண்டு நாளைக்கு சென்னைக்கு வராதீங்க..!மழை களத்தில் முதலமைச்சர்!

ம.பா.கெஜராஜ்,

சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை பாதிப்புகளை களத்தில் இறங்கி நேரில் ஆய்வு செய்தார்.

 சென்னை மழை களத்தில் இறங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு பகுதிகளில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்தார். மக்களை சந்தித்து தேவையான உதவிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

  நவம்பர் 6 ஆம் தேதி சனிக்கிழமை இரவு முதல் நவம்பர் 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை பெய்த கனமழையைத் தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பல பகுதிகள் பெரும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

 புரசைவாக்கம், திண்டிவாக்கம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

  வடசென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், கொளத்தூர் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் உணவுகளை வழங்கினார்.

  முதல்வர் ஸ்டாலின், நிவாரணப் பணிகளை நேரில் கண்காணித்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் மழைநீரை வெளியேற்றுவது போன்ற நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 அப்போது 50,000 உணவுப் பொட்டலங்கள் இதுவரை விநியோகிக்கப்பட்டது.

 அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், வெள்ளம் சூழ்ந்த 500 பகுதிகளுக்கு பம்புகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், நகரில் உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ வசதிக்கான நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

  சென்னைக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளவர்கள் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பயணத்தை ஒத்திவைக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

  சென்னை, கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, நாமக்கல், ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், ஈரோடு ஆகிய 11 மாவட்டங்களில் 200 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  மேலும் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், தீயணைப்புத் துறை, தேசிய பேரிடர் மேலாண்மை, மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகள், சென்னை பெருநகர காவல் துறையினர் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

  மதுரை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையின் (என்.டி.ஆர்.எஃப்) இரண்டு குழுக்களின் நிவாரணப் பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

   மற்றொரு குழு திருவள்ளூர் மாவட்டத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. உதவிக்காக 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் மேலும் கூறினார். கட்டுப்பாட்டு அறையை 1070 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

  மேலும், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் 2 நாட்கள் மழை விடுமுறை என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளார்.

  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் நவம்பர் 8 திங்கள் மற்றும் நவம்பர் 9 செவ்வாய்கிழமை விடுமுறை அளிக்கப்படும் என செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

  கொளத்தூர் பகுதியில் முதல்வர் ஆய்வுமேற்கொண்ட போது அமைச்சர்கள் கே.என்.நேரு,சேகர் பாபு, தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு, காவல் துறை தலைமைஇயக்குநர் சி.சைலேந்திரபாபு,சென்ன் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங்கேடி  மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் உடன் வந்த் இருந்தனர்.

  இந்நிலையில்  114 வட்டம் லாக் நகர், கிளிமரம் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை கால்வாயில் வடியவைக்கும் பணிகளை சேப்பாக்கம் தொகுதியிம்ன் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி நேரில் சென்று பார்வையிட்டார்.

 அங்கு பல இடங்களில் நீர் மெதுவாக வடிவதால் எந்திரங்கள் மூலம் நீரை உறிஞ்சி நீர்நிலைகளில் விடும் பணியை அவர்கள் மேற்கொண்டனர்.