இன்னொருவரை போட்டுவிட்டு சரண்டர் ஆகிறேனே?

இன்னொருவரை போட்டுவிட்டு சரண்டர் ஆகிறேனே?

டி.முகமது இர்பான்,

 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மஜக முன்னாள் நிர்வாகி வசீம் அக்ரம் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட தோட்டா மணி என்கின்ற மணிகண்டன் என்பவர் கடந்த 21 ம் தேதி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.      அவரை ரிமாண்ட் செய்த நீதிபதி சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன் பேரில் மணிகண்டன் நீதிமன்ற காவலில் இருந்து வந்த நிலையில், அவரை  திருப்பத்தூர் மாவட்ட போலிசார், வாணியம்பாடி நீதிமன்ற நடுவர் காளி முத்து வேல் முன்பாக ஆஜர்படுத்தினர்.

 நீதிபதி அவரை அடுத்த மாதம் 12 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

 அதன் பேரில் பலத்த பாதுகாப்புடன் போலீஸார் அவரை வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர்.

  கடந்த பத்தாம் தேதி வாணியம்பாடியில் நடந்த கொலையில் இவருக்கு தொடர்பு உள்ளதை கண்டுபிடித்த போலிசார் அவரை கைது செய்ய முயன்ற போது நூலிழையில் தப்பிக் கொண்டே இருந்தார்.

  அப்போது அவர் வீட்டு நபரை பிடித்த போலிசார், நீ சரண்டர் ஆனால் தான் விடுவிப்போம் என்றார்களாம்.

  அதற்கு, அய்யா கொஞ்சம் டைம் கொடுங்கள் இன்னொறுவரை போட்டுவிட்டு நானே சரண்டர் ஆகிறேன், பெரிய தொகை பேசிவிட்டேன் என்றாராம் கூலாக.

  அதிர்ந்த போலிசார் உடனடியாக அவரை கைது செய்ய முயன்ற போது வேறு வழியின்றி அவர் மேற்படி சரணடைந்தார்.