முறைகேட்டில் திமுகவினர்:-குறுவை சாகுபடி நிவாரணம் லபக்!

ஜி.பாலகுரு,
குறுவை சாகுபடி நிவாரணம் வழங்குவதில் முறைகேடு நடந்ததாக கிராம மக்கள் ஒப்பாரி வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆலங்குடி மற்றும் பின்னவாசல் பகுதிகளில் குறுவை சாகுபடி நிவாரணம் வழங்குவதில் முறைகேடு ஈடுபட்டதாக கூறி அப்பகுதி கிராம மக்கள் ஒப்பாரி வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் திருவாரூர் திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
குறிப்பாக திமுக கிளைச் செயலாளர் சுப்பையா மற்றும் திமுக ஒன்றிய கவுன்சிலர் லலிதாவின் கணவர் கோவிந்தராசு ஆகியோர் குறுவை சாகுபடி செய்ததில், சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறி நிவாரணம் பெற்றுள்ளதை கண்டிக்கும் விதமாக இப்பகுதி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த மோசடிக்கு உறுதுணையாக இருந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வேளாண் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் ஒப்பாரி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து அறிந்து வந்த வேளாண் துணை இயக்குனர் ஹேமா அவர்கள் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததன் அடிப்படையில் மக்கள் கலைந்து சென்றனர்.