பழிக்கு பழி கொலை வெறி..சிக்கி சிறை!

க.முகில்
சென்னையை அடுத்துள்ள செம்மஞ்சேரி சுவாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் அர்னால்டு சாமுவேல். இவருக்கும் பாபுகான் என்ற நபருக்கும் முன் விரோதம் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த அர்னால்ட் சாமுவேல் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்துள்ளார்.
அப்போது பாபுகான் அவரை கொலை செய்ய முயற்சி செய்தார், அதன்பேரில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனை அடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த பாபுகான், அர்னால்டு சாமுவேலை கொலை செய்யும் நோக்கத்துடன்னா ஆயுதங்களுடன் சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த செம்மஞ்சேரி காவல் ஆய்வாளர் சீனிவாசன் பாபுகானை கைது செய்து அவரிடம் இருந்த அரிவாளை பறிமுதல் செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தார்.