வெளி மாநிலத்திற்கு கடத்த இருந்த ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

வெளி மாநிலத்திற்கு கடத்த இருந்த ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

 கு.அசோக்,  

  திருப்பத்தூர் மாவட்டம்,ஆந்திர மாநிலத்துக்கு கடத்த இருந்த 1 டன் அரிசியை போலீசார்  பறிமுதல் செய்தனர்.  திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி பகுதியைச் சேர்ந்த அசோகன் மகன் அண்ணாமலை ஒரு டன் அளவிலான ரேஷன் அரிசியை வெளி மாநிலத்திற்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

   இதனையடுத்து திருப்பத்தூர் கிராமிய போலீஸாருக்கு பொதுமக்கள் கொடுத்த ரகசிய தகவலின் பேரில் உதவி காவல் ஆய்வாளர் அகிலன் சம்பவ இடத்திற்கு சென்று கடத்தலுக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு டன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

  மேலும் அண்ணாமலை போலீசார் வருவதை அறிந்து தப்பிச் சென்றுள்ளார். இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை திருப்பத்தூர் நுகர்பொருள் வணிக கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.