சி.எம்.சி நிறுவனர் டாக்டர் ஐடா அம்மாவுக்கு 151 வது பிறந்த தினம்! மரியாதை செய்யாத நிர்வாகம்!

சி.எம்.சி நிறுவனர் டாக்டர் ஐடா அம்மாவுக்கு 151 வது பிறந்த தினம்! மரியாதை செய்யாத நிர்வாகம்!

ம.பா.கெஜராஜ்,

 கடந்த டிசம்பர் 9ஆம் தேதி 1870 ஆம் ஆண்டு இராணிப்பேட்டையில், ஜான் ஸ்கடர் மற்றும் சோஃபியா வெல்டு ஸ்கடர் தம்பதியருக்கு புதல்வியாக ஐடா சோஃபியா ஸ்கடர் பிறந்தார்.

 ஏழு வயது சிறுமியாய் இருந்தபோது அமெரிக்கா சென்று பள்ளிப்படிப்பை முடித்து தனது 21 வது வயதில் இந்தியா  திரும்பினார்.

 ஒரே நாளில் சிலருக்கு பிரசவத்தில் சிக்கல் ஏற்பட்டதால் தன் உதவியை தேடி வந்த மூன்று பேருக்கு (பிராமணர், இஸ்லாமியர், முதலியார் ) உதவ இயாலாததாலும், தன் தகப்பனார் மருத்துவராக இருந்தாலும், ஒரு ஆணின் உதவியை பிரசவத்தின்போது  ஏற்க மனமில்லாததால், அந்த மூன்று பேரும்  உயிரிழந்ததை அறிந்தார்.

 இச்சம்பவத்தால் பெரும் அதிர்ச்சி அடைந்த இளம் பெண் ஐடா மருத்துவம் பயின்று தன் எதிர்காலத்தையே இந்திய பெண்களின் நலனிற்காக அர்ப்பணித்தார்.

 அந்த வகையில் மருத்துவம் படித்து 1900 ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய ஐடா இந்தியாவின் முதல் பெண்கள் தனியார் மருத்துவ கல்லூரியை ஆரம்பித்தார்.

 1946ல் இந்தியாவின் முதல் செவிலியர் பட்டப்படிப்பை துவங்கினார். 1918 ல் துவக்கப்பட்ட மருத்துவ கல்லூரி 1947 வரை பிரத்தியேகமாக பெண்களுக்கான மருத்துவ கல்லூரியாகவே திகழ்ந்து.

 எண்ணற்ற பெண் மருத்துவர்களை இந்த நாட்டின் நலனுக்காக உருவாக்கித்தந்த பெருமையும் அவரையே சாரும்.

 திருமணம் கூட செய்துகொள்ளாமல் தன் முழு வாழ்க்கையையும் இந்திய பெண்களின் நலனிற்காகவே அர்ப்பணித்து 89 வயது வரை வாழ்ந்து இந்தியாவிலேயே  காலமானார்.

 அவரது உடல் வேலூர் டோல்கேட்டிலுள்ள கிறிஸ்தவ கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. 

 இந்நிலையில் அன்னை ஐடாவின் 151 வது பிறந்த நாள்  இன்று அனுசரிக்கப்படுகிறது. ஆனால் அவரது கல்லறைக்கு மேற்படி நிர்வாகத்தினர் ஒருவர் கூட சென்று மாலை மரியாதை செய்யவில்லை.

  சி.எஸ்.ஐ.மத்திய ஆலயத்தினர் மற்றும் சிலரே மாலையிட்டு மரியாதை செலுத்தினர்.

குறிப்பு:-   ஐடா அம்மையாரால் உருவாக்கப்பட்ட மருத்துவ நிறுவனத்தில் பணியாற்றி சொகுசாக வாழ்க்கை நடத்தும் பலர் கேரள மாநிலத்தவர் என்பதால் ஐடா அம்மாவின் விவரங்கள் ஏதும் தெரியாமல் அவரது பிறந்த நாளை அவர்கள் கண்டு கொள்வதேயில்லை. இனி வரும் காலங்களில் அது போன்றவர்களுக்கு இது குறித்தெல்லாம் கற்பிக்க வேண்டும்.

 ஏன்னா நன்றி ரொம்ப முக்கியம் அல்லவா?