ஹேண்ட்கப்பை வெல்டிங் ஷாப்பில் வெட்டி எஸ்கேப் ஆனவன் கைது!

கு.அசோக்,
பல்வேறு குற்றவழக்குகளில் தேடப்பட்டு வந்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கணேசன் என்பவர் ஹேண்ட்கப்பை வெட்டி எஸ்கேப் ஆன நிலையில் தனிப்படை போலிசார் அவனை பிடித்திருக்கிறார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுவேதா இவரது கணவர் கணேசன், இவர் மீது பல்வேறு குற்றவழக்குகள் உள்ளதாம், அதில் கடந்த அக்டோபர் மாதம், மூதாட்டியிடம் வைரம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்த வழக்ம் அடங்கும்.
இந்நிலையில் கடந்த 6 ஆம் தேதி கோயமுத்தூர் குற்றப்பிரிவு காவல்துறையினர் துத்திப்பட்டு கிராமத்துக்கு வந்து, கணேசனை கைது பிடித்து ஙேண்ட்கப் மாட்டினர்.
. அப்பொழுது குற்றப்பிரிவு காவலர்களை தாக்கிய கணேசனின் ஆதரவாளர்கள் காவல்துறையினரின் ஹேண்ட்கப்பை வெல்டிங் மூலம் உடைத்து கணேசனை அங்கிருந்து தப்பிக்க வைத்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்நிலையில் இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பளார் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் சிறப்பு தனிப்படை அமைத்து, தலைமறைவாகிய கணேசனை தேடும் பணியில் ஈடுப்பட்டனர்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த கணேசனை கைது செய்த தனிப்படை காவல்துறையினர் அவனை விசாரணைக்காக உமராபாத் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்
மேலும் கணேசனுடன் தலைமறைவாகியுள்ள மேலும் இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.