வேலூர் நறுவீ மருத்துவமனையில் பொங்கல் விழா! தலைவர் ஜி.வி. சம்பத் தலைமையில் கொண்டாட்டம்!

ம.பா.கெஜராஜ்,
வேலூர் நறுவீ மருத்துவமனையில் பொங்கல் விழா! தலைவர் ஜி.வி. சம்பத் தலைமையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டது.
உலகெங்கும் உள்ள தமிழர்களின் பாரம்பரிய திருவிழாக்களில் முக்கியமாக கொண்டாடப்படுவது பொங்கல் திருவிழா. உழவர் பெருமக்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் கொண்டாடப்படும் பொங்கல் திருவிழாவானது சாதி சமயமதங்களை கடந்து அனைவராலும் கொண்டாடப்படுகிறது.
வேலூர் நறுவீ மருத்துவமனையில் இன்று ஜன-13, பொங்கல் திருவிழா சமத்துவ பொங்கலாக கொண்டாடப்பட்டது. மருத்துவமனை நிறுவனர் மற்றும் தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் தலைமையில், துணைத் தலைவர் அனிதா சம்பத் பொங்கலிட்டு இந்த சமத்துவ பொங்கலை தொடங்கி வைத்தார். தொடர்ந்து தமிழர்களின் பாராம்பரிய கலைகளான கும்மியடித்தல், உரியடத்தில், சிலம்பம், கயிறு இழுக்கும் போட்டி, கரும்பு கடிக்கும் உள்ளிட்ட போட்டிகள்
மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கிடையே நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
பொங்கல் விழாவை யொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு
மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் பரிசுகள் வழங்கி பேசுகையில் பொங்கல் விழா என்பது
உலகெங்கும் உள்ள தமிழர்கள் கொண்டாடப்படும் முக்கிய விழாவாகும்.
சாதி மத பேதமின்றி உற்சாகமாக கொண்டாடும் இத்திருவிழாவில் பங்கேற்க உலகில் பல்வேறு பகுதிகளில் பரவியுள்ள தமிழர்கள் சொந்த ஊருக்கு வருகை தந்துஉற்றார்உறவினர்களுடன்புத்தாடைஅணிந்துமகிழ்ச்சியுடன்கொண்டாடுகின்றனர்.
இவ்விழாவை கொண்டாடும் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன்.
இவ்விழாவில் மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜேக்கப் ஜோஸ், பொது
மேலாளர் நிதின் சம்பத், அபிராமி சம்பத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.