பெண்களின் பாதுகாப்புக்காக பெப்பர் ஸ்ப்ரே.. சால்ட் அலாரம் வழங்கினார்! கொதிக்கும் எதிர்கட்சி தலைவர்! தலைநகரில் இன்னொரு பாலியல் தொல்லை சம்பவம்!

ம.பா.கெஜராஜ்,
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் கைது
சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குள் புகுந்து பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இராணிப்பேட்டையைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.ஏற்கெனவே இதே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மருத்துவ மாணவிக்கு புத்தாண்டு தினத்தில் மருத்துவமனை வளாகத்தில் பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் கைது செய்யப்பட்ட நிலையில் மீண்டும் ஒரு பாலியல் குற்றம் நடந்திருக்கிறது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மருத்துவமனை வளாகத்தில் இராணிப்பேட்டையைச் சேர்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞர் தங்கியிருந்துள்ளார்.
மது போதையில் இருந்த அவர், ¢ இரவு நேரத்தில் நோயாளிகள் வார்டுக்குள் சென்று அங்கு தூங்கிக்கொண்டிருந்த 50 வயது பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார். அந்த பெண் கூச்சலிட, அருகில் இருந்தவர்கள் இளைஞர் சதீஷ்குமாரைப் பிடித்து, போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் சதீஷ்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் தமது எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது,
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒருவன் புகுந்து உள் நோயாளியாக இருந்த பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
மீண்டும் தலைநகரில், மிக முக்கியமான அரசு மருத்துவமனைகளுள் ஒன்றில், இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது, ஸ்டாலின் மாடல் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது துளியும் இல்லை என்ற வெட்கக்கேடான நிலையை தெளிவாக காட்டிவிட்டது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒருவன் புகுந்து உள் நோயாளியாக இருந்த பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) January 13, 2025
மீண்டும் தலைநகரில், மிக முக்கியமான அரசு மருத்துவமனைகளுள் ஒன்றில், இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது, ஸ்டாலின் மாடல் ஆட்சியில்… pic.twitter.com/J4TUrxGpm7
பெண்கள் பாதுகாப்பு பற்றி சட்டமன்றத்தில் வசனம் பேசிய திரு.திரு. ஸ்டாலின், இப்போது என்ன பதில் சொல்லப் போகிறார்?
யார் அந்த சார் என்று கேட்டாலே எரிச்சல் ஆகும் திரு.ஸ்டாலின் அவர்களே- உங்கள் ஆட்சியில் இதுபோன்ற "சார்"கள் காப்பாற்றப் படுவதால் தான், மேலும் பல "சார்"கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள்.
கீழ்ப்பாக்கம் மருத்துவமனை பாலியல் வழக்கில் கைதானவனுக்கு உச்சபட்ச சட்டப்பூர்வ தண்டனை கிடைக்கப் பெறுவதை உறுதிசெய்ய ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன்.
"பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்" என்பது போல் இந்த விடியா ஆட்சி அமைந்த நாள் முதலே, நாள் ஒரு பாலியல் வன்கொடுமை ,பொழுதொரு கற்பழிப்பு சம்பவங்கள் என தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத நிலை நீடிக்கிறது.
பெண்களிடம் தீமை புரிபவர்களை தங்கள் கட்சியிலேயே "அனுதாபி" களாக வைத்துக்கொண்டு,
அவர்களுக்கு புகலிடமும் அளித்துவரும் திமுக இந்நாட்டின் சாபக்கேடு. இனியும் இந்த
@ஸ்டாலின் மாடல் ஆட்சியை நம்பி எந்தப் பயனும் இல்லை, தமிழ்நாட்டுப் பெண்கள், நீங்கள் எந்த வயதினர் ஆனாலும், தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் நீடித்து வருகிறது,
ஆகவே இன்று தலைமை கழகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில், Pepper Spray, SOS alarm அடங்கிய பாதுகாப்பு உபகரணங்கள் பெட்டகத்தை மகளிர்க்கு வழங்கியதோடு, பாதுகாப்பற்ற இந்த ஆட்சியில் பெண்கள் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ள இதுபோன்ற உபகரணங்களை எப்போதும் உடன் வைத்துக்கொள்ளுமாறும் ஒரு தந்தையாக உங்களிடத்தில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்திருக்கிறார்