அத்து மீறி வைக்கப்பட்ட சீனிவாச பெருமாள் சிலை அகற்றம்! பக்தர்கள் கொதிப்பு!

கு.அசோக்,
108 திவ்ய தலங்களில் ஒன்றான சோளிங்கர் யோக நரசிம்மர் கோவிலில் சீனிவாச பெருமாள் சிலையை இரவவோடு இரவாக நிறுவிய மர்மநபர்களால் பரபரப்பு - அதனை அகற்ற வேண்டுமென இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் போலீசார் உதவியோடு நிறுவப்பட்ட சிலை அப்புறப்படுத்தப்பட்டது.
இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அருள்மிகு லஷ்மி நரசிம்மர் ஆலயம் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் செயல்பட்டு வரும் இங்குள்ள தக்கான்குளம் என்கிற பிரம்ம தீர்த்த குளத்தில் இரவோடு இரவாக மர்மபர்கள் சிலர், 15 அடி உயரமுள்ள சங்கு சக்கரத்துடன் கூடிய சீனிவாச பெருமாள் சுவாமி சிலையை நிறுவி பூஜை செய்துள்ளனர்.
இதை அறிந்த சுற்றுவட்டாரம் பொதுமக்கள் காலை முதலே புதிதாக வைக்கப்பட்ட சீனிவாச பெருமாள் சிலைக்கு பூஜை செய்ய துவங்கினர்.
இதையறிந்த அறநிலை துறையும் ,கோயில் நிர்வாகம் அனுமதி இன்றி வைக்கப்பட்ட சிலையை அகற்ற முற்பட்டனர்.
அதற்கு அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது பக்தர் ஒருவர் வேண்டுதலுக்காக சிலையை நிறுவுவதாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக அறநிலைத்துறை இடம் கோரிக்கை மனு வழங்கி வந்ததாகவும், அதற்கு அறநிலையத்துறை எந்த விதத்திலும் செவி சாய்க்கவில்லை.
ஆகவே இரவோடு இரவாக இந்த சிலை நிறுவப்பட்டதாக சொன்னார்கள்.
இதனை அடுத்து அறநிலை துறை அதிகாரிகள் கோயில் நிர்வாகம் காவல்துறை உதவியோடு அந்த சிலையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
¢ இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அப்பகுதியில் குவிந்தனர் சிலையை எடுக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீநிவாச பெருமாள் சிலை அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. அப்போது கடும் எதிர்ப்பில் ஈடுபட்ட பக்தர்கள் 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர் இதனால் சோளிங்கர் பகுதியில் மிகவும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.