தேசிய பறவை மயில்கள் கொலை!

ஜி.கே.சேகரன்,
ஆலங்காயம் அருகே விவசாய நிலத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 9 மயில்கள்: மயில்களுக்கு விஷம் வைத்து கொல்லப்பட்டதா? அல்லது மயில் தோகைக்காக கொல்லப்பட்டதா? என பல்வேறு கோணங்களில்ஆலங்காயம் காவல்துறையினர் விசாரணை.
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அருகே பெத்தூர், கோமுட்டேரி பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்பவரின் விவசாய நிலத்தில் 7 பெண் மயில்கள் 2 ஆண் மயில்கள் என மொத்தமாக 9 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது.
இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த ஆலாங்காயம் வனதுறை அதிகாரிகள் இறந்து கிடந்த மயில்களின் உடல்களை கைப்பற்றி மயில்களுக்கு விஷம் வைத்து கொல்லப்பட்டதா?அல்லது மயில் தோகைக்காக கொல்லப்பட்டதா ? என பல்வேறு கோணங்களில் சிசாரித்தனர்.
மேலும் ஆலங்காயம் காவல்துறையினரும்¢ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே போல் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து இறந்த மயில்களை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வனத்துறையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மயில்கள் தேசிய பறவையாகவும் பாதுகாக்கப்பட்ட உயிரினங்களாகவும் இருப்பதால் இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.