ஆளுநருக்குத்தான் திமிர்! அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

ஆளுநருக்குத்தான் திமிர்! அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

 ஜி.கே.சேகரன்,

வேலூரில் அரசு பொருட்காட்சியை தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார் - பெரியாரை பற்றி பேசுபவர்களின் பிறப்பையே சந்தேகப்படுகிறேன் - ஆளுநருக்குத்தான் திமிர் - முல்லை பெரியாறு அணையில் பேபி அணை கட்டுமான பணிகளை விரைவில் தமிழக அரசு மேற்கொள்ளும் என பேட்டி.

  வேலூர்மாவட்டம், வேலூர் மாங்காய் மண்டி அருகிலுள்ள ஸ்ரீ கிருபா மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில்  அரசு பொருட்காட்சி துவக்க விழாவானது மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தலைமையில் நடைபெற்றது.

 இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு அரசு பொருட்காட்சியை துவங்கி வைத்தார்.

  இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி,மேயர் சுஜாதா, மண்டல குழுதலைவர் புஷ்பலதா, காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 இதில் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.80.54 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 297 பயனாளிகளுக்கு  அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.

 மேலும் இந்த அரசு பொருட்காட்சியில் கரகாட்டம் ,மயிலாட்டம்,ஒயிலாட்டம்,தவில் நாதஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.

இப்பொருட்காட்சியில் வேளாண்மைத்துறை ,தோட்டக்கலைத்துறை,சமூகநலத்துறை,மகளிர் திட்டம்,உள்ளிட்ட பல துறைகளின் சார்பில் அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தது இதனை மக்கள் ஆர்வமுடன் பார்த்தனர்.

 முன்னதாக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், முல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை உயர்த்துவதற்கு கேரள அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது என்றார்.

 அப்போது, தமிழக அதிகாரிகள் மெத்தனம் காட்டுவது குறித்து கேட்ட போது 152 அடி முன்பாக பேபி அணை கட்ட வேண்டும் என்பது உச்சநீதிமன்ற உத்தரவு. பேபி அணையை நாம் இன்னும் கட்டவில்லை. ஏன் என கேட்டால் பேபி அணைக்கு அருகில் மரங்கள் இருக்கிறது அவற்றை வெட்ட அனுமதி அளிக்கவில்லை.

 தற்போது தான் கேரள அரசு அனுமதி அளித்துள்ளது. அதனை கட்ட தமிழக அரசு தயாராக உள்ளது. பாலாற்றின் குறுக்கே ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அணை கட்டவுள்ளது குறித்த கேள்விக்கு அவர்கள் இடத்தில் அவர்கள் அணை கட்டவுள்ளனர் நாமும் எதிர்ப்போம். அவர்களும் தண்ணீரை தந்துவிடுவார்கள் அது ஒன்றும் பெரியது கிடையாது.

 ஈரோடு இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பது குறித்து கேட்டதற்கு எதிர்க்கட்சிகள் அவ்வளவு பலமாக உள்ளனர் என்று அர்த்தம்.

 அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் பாலியல் குற்றங்கள் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை என்ற புதிய விதியை இந்தியாவிலேயே முதல்முதலாக இங்கு தான் கொண்டு வந்தார் முதல்வர்.

  தொழில் சட்டம் ஒழுங்கு திட்டங்களால் மக்கள் நிம்மிதியாக பொங்கலை கொண்டாடுகின்றனர் பெரியாரை பற்றி தரக்குறைவாக பேசுபவனின் பிறப்பை நான் சந்தேகப்படுகிறேன்.

  ஆளுநர் தமிழக முதல்வர் கர்வம் என கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் முதலில் பாடுவது தான் மரபு இத்தனை ஆண்டுகளாக முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும் தேசிய கீதமும் தான் பாடியுள்ளோம். அந்த மரபை மாற்ற சொன்னதை தான் முதல்வரை ஆணவம் என்று சொல்கிறார். ஆளுநர் என்ற திமிர் இருக்கிறது என கூறினார்.