பாவம் போலீசார்! அமைச்சர் துரைமுருகன் வீட்டருகே உ.பி.க்கள் முட்டி மோதிக்கொண்டு ரகளை!
ம.பா.கெஜராஜ்,
திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் வீட்டின் முன் அக்கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் முட்டி மோதிக்கொண்டு, ரகளையில் ஈட்பட்டனர். ஒன்றியக்குழு சேர்மனும், ஒன்றியச்செயலாளரும் இப்படி அநாகரிகமாக செயல்பட்டதால் போலீசார் செய்வதறியாது திகைத்தனர்.
கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் தேதிக்கு முன்பு வேலூர் வந்து சென்ற அமைச்சர் பல்வேறு அரசு பணிகளின் காரணமாகவும் அதை தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்றத் தொடரின் காரணமாகவும் காட்பாடி இல்லத்திற்கு வருகை தராமல் இருந்தார்.
இந்நிலையில் ஜன-12 வேலூர் வந்திருந்த அமைச்சரை காண்பதற்காக அக்கட்சியினர் அவரது வீட்டின் முன்பு குவியத் துவங்கினர்
அவர்களிக்ல் காட்பாடி ஒன்றீயக்குழு தலைவர் வேல் முருகனும், காட்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர் கருணாகரனும் அடக்கம்.
அந்த சூழ்நிலையில் அமைச்சரின் வீட்டின் முன் திடீரென்று வேல்முருகன் மற்றும் கருணாகரனும் ஒருவரை ஒருவர் சட்டை பிடித்து அடித்து தாக்கிக் கொண்டனர். அப்பொழுது கருணாகரன் வேல்முருகனை பார்த்து என்னை அடிக்கிறாயா என்ன அடிச்சு கொன்று விடுவாயா அடிச்சு பொதைத்து விடுவாயா? என்னிடம் நடக்காது அதை பெங்களூருவில் வைத்துக்கொள் என்று சத்தம் போட்டார்.
கூடியிருந்த கட்சிக்காரர்கள் அவர்களை விலக்கி சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர். அமைச்சர் வீட்டுக்கு உள்ளே அழைத்து சென்று அமரவைத்த பின்பும் கருணாகரன் வேல்முருகனை பார்த்து பேசிக்கொண்டே இருந்தார்.
வேல்முருகணிடம் கருணாகரன் கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது ஒரு கோடி ரூபாய் கடன் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது...
அதில் சுமார் 70 லட்சம் வரை திருப்பி கொடுத்து விட்டதாகவும் மீதி 30 லட்சத்தை கேட்ட பொழுது வேல்முருகனை உன்னால் என்ன செய்ய வேண்டும் செய்து கொள் என்று கருணாகரன் தாறுமாறாக பேசியதால் இருவருக்கும் ஏற்கனவே மோதல் நடந்ததாக கூறப்படுகிறது..
இது சம்பந்தமாக அமைச்சர் இருவரையும் அழைத்து எச்சரித்து அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
காட்பாடி வள்ளிமலையை சேர்ந்த வேல்முருகன் பெங்களூருவில் ஆயில் பிசினஸ் செய்து கொண்டிருந்தார். கட்சிப் பணியில் எந்த தொடர்பும் இல்லாத அவரை நேரடியாக வேலூர் எம்பி கதிர் ஆனந்த் அழைத்து அவருக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு கொடுத்து ஒன்றிய குழு சேர்மனாகவும் ஆக்கிவிட்டார்.
இதனால் உடன் பிறப்புகள் மத்தியில் சற்றே சலசலப்பு இருந்து வருவதாக கூறப்படுகிறது.
அதே போல் கருணாகரன் உள்ளாட்சி பிரமுகராக இருந்தபோது ஏரியில் வண்டல் மண் எடுப்பதில் பல கோடி ரூபாய் கொள்ளை அடித்ததாகவும் கட்சிக்காரர்களை எந்த வகையிலும் கவனிக்கவில்லை என்ற குற்றசாட்டும் கூறப்படுகிறது.
மேலும் வேல்முருகனின் அடாவடித்தனம் கட்சிக்காரர்களை மதிக்காதது மூத்தவர்களிடம் சரிவர நடந்து கொள்வதில்லை என்கின்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருந்து வந்ததாகவும், நீ ஒன்றும் கழகத்தில் முளைத்த செடி அல்ல பிடுங்கி நட்ட செடி என்று கிண்டலாகவும் உ.பி.க்கள் பேசி வருவதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் தான் தற்போது அமைச்சர் வீட்டு வாசலில் இவர்கள் மோதிக்கொண்டு போலீசாருக்கும் உடன் பிறப்புகளுக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.