பிஷப் துவக்கிவைத்த விழிப்புணர்வு பேரணி!

ஜி.கே.சேகரன்,
வேலூரில் தூய தமிழ் பயன்பாடு குறித்தும் போதை தடுப்பு குறித்தும் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி பேராயர் சர்மா நித்யானந்தம் துவங்கி வைத்தார். Ko
வேலூர்மாவட்டம்,வேலூரில் உள்ள ஊரீசு கல்லூரியில் செந்தமிழ்திருத்தேர் தூய தமிழர் மாணவர் இயக்கம் சார்பில் பிற மொழி கலப்பில்லாமல் தூய தமிழ்மொழியை பேசவும் அதன் பயன்பாடு குறித்தும் மாணவர்கள் பொது மக்களிடையே போதை தடுப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை சி.எஸ்.ஐ பேராயர் சர்மா நித்யானந்தம் துவங்கி வைத்தார்.
இதில் கல்லூரியைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர்.
மேலும் இது குறித்து பேரணி ஊரீசு கல்லூரியிலிருந்து புறப்பட்டு அண்ணாசாலையின் வழியாக மக்கான் சந்திப்பு சென்று அங்கிருந்து மீண்டும் ஊரீசு கல்லூரி வந்து நிறைவடைந்தது.
இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் மாணவர்கள் கையில் பல்வேறு போதை தடுப்பு குறித்தும் தூய தமிழ்பயன்பாடு அடங்கிய வாசகங்களை கையில் ஏந்தி கோஷங்களை எழுப்பி ஊர்வலமாக சென்றனர்.