வாக்கு சீட்டை போலியாக அச்சடித்தனராம்- வழக்கறிஞர் பரபரப்பு புகார்?

ஆர்.ரமேஷ்,
அ.தி.மு.க. ஆட்சியின்போது அதிகார புள்ளிகளாக உலவிக்கொண்டிருநவர்களின் கண் அசைவுக்கு ஏற்றார் போல் தேர்தல் பணி அலுவலர்கள் செயல்பட்டதாகவும், வாக்கு சீட்டை போலியாக அச்சடித்தனர் எனவும் வழக்கறிஞர் கே.என்.சரவணன் என்பவர் புகார் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர், தேர்தல் ஆணைய,லஞ்ச ஒழிப்புபிரிவு மற்றும் உள்ளூர் தேர்தல் அலுவலர் ஆகியோருக்கு அவர் எழுதியிருப்பதாவது,
அய்யா நான் காக்கங்கரை கிராம ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிட்டேன். திருப்பத்தூர் மாவட்டத்தில் இந்த இடம் உள்ளது.
வாக்கு எண்ணிக்கை கந்திலி ஒன்றியம் கெஜநாயகன்பட்டியிலுள்ள அரசு பள்ளிக்கூடத்தில் நடந்தது. அப்போது பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. முறையாக வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குகள் எண்ணவில்லை . மேலும் கடந்த ஆட்சியில் பணியில் அமர்த்தப்பட்ட அ.தி.மு.கவின் நலம் விரும்பிகள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் சட்ட விரோதமாக பணியாற்றியுள்ளார்கள்,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.ஜி.ரமேஷ் அவர்களின் தலைமையில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. அதில் ஆளும்கட்சியை சேர்ந்த சிலர் கே.ஜி.ரமேஷ் என்பவரின் செயல்களுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர்.
இதற்காக அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் ஆதாயம் பெரும் அளவில் அடைந்துள்ளனர் .
- வாக்கு எண்ணும் மையத்தில் முதல் அடுக்கு பாதுகாப்பு பணியில் அதி.மு.க. வின் ஆதரவாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 2. வாக்கு எண்ணிக்கை மையத்தில் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் அனைவரையும் 11.10.2021 ஆம் தேதி மாலை முதல் பார்வையிடவும் , பாதுகாப்புக்கு இருக்கவும் அனுமதி மறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர் . 3. வாக்கு எண்ணிக்கை மையத்தில் கடந்த 12.10.2021 ஆம் தேதி அன்று விடியற்காலை சுமார் 1.30 மணி அளவில் சட்ட விரோதமாக சிலர் உள்ளே முன் வாசல் வழியாக அரசு வாகனங்களிலும் , பின்புறம் மதில் சுவர் மீது ஏறியும் உள்ளே நுழைந்ததாகவும் அப்போது சுமார் 2 மணி நேரம் மின்சாரம் தடைபட்டதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
- கடந்த 06.10.2021 ஆம் தேதிக்கு பின்னர் வாக்கு சீட்டுகள் தலைவர் , ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கானது கந்திலி ஒன்றியத்தில் குறிப்பிட்ட -3 பஞ்சாயத்துக்களுக்கு மட்டும் வேண்டி போலியாக தருமபுரி மாவட்டம் , அரூர் வட்டம் , கம்பைநல்லூர் என்னும் இடத்தில் ஒரு தனியார் அச்சகத்தில் அச்சடித்து பெற்றுள்ளார்கள் .
- அதனை கடந்த 12.10.2021 ஆம் தேதி விடியற்காலை வாக்கு எண்ணிக் மையத்திற்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது .
- குறிப்பாக வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியில் அமர்த்தபட்டவர்களில் சிலர் அ.தி.மு.க வை சேர்ந்த குரும்பேரி தலைவர் வேட்பாளர் ராமு என்பவரின் மனைவி லல்லிபுஷ்பம் என்பவர் இவர் ஜல்லியூர் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் .
அ.தி.மு.க வை சேர்ந்த கந்திலி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் 13 வது வார்டு வேட்பாளர் திருமதி.சாந்தி என்பவரின் கணவர் திருப்பதி என்பவரின் சகோதரர் வெங்கடேசன் என்பவர் இவர் குனிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரத்துறை வாகனம் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார் .
அ.தி.மு.க ஆட்சியில் கே.ஜி.ரமேஷ் என்பவரால் சத்துணவு அமைப்பாளராக முபினா என்பவர் பணியில் சேர்ந்தவர் . அவரது கணவர் ஜமால் என்பவர் காக்கங்கரை கிராம ஊராட்சி 4 வது வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டார் .
அவரும் அவருடன் நத்தம் கிராமத்தை சேர்ந்த அவரது உறவினர்கள் இரு நபர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணி அமர்த்தப்பட்டனர்.
- காலை 8.00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கப்படும் ஆனையம் அறிவித்து இருந்த நிலையில் அவ்வாறாக வாக்கு எண்ணிக்கை முறையாக ஆரம்பிக்கவில்லை .
மேலும் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தபால் வாக்குகள் முகவர் மற்றும் வேட்பாளர் முன்னிலையில் பிரித்து எண்ணவில்லை
வாக்கு பெட்டிகள் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் பிரிக்கவில்லை . வாக்கு என்னும் மையத்தில் அலுவலர்களே பிரித்தனர்.
வாக்கு எண்ணிக்கை சுமார் 11 மணி அளவில் ஆரம்பிக்கப்பட்டு மூன்று மணி அளவில் முதல் சுற்று அறிவித்தார்கள்.
வாக்கு எண்ணிக்கையின் போது வாக்கு சீட்டுக்கள் குறிப்பிட்டவை பல நிற மாறுதல்களுடன் இருந்தன் குறிப்பாக எங்கள் பகுதி வாக்கு சீட்டுக்கள் ஒரு வேறு நிறமாக இருந்தன. சாதாரன பிங்க் ஆகவும் , கூடுதலாக பிங்க் நிறமாகவும் இரு வேறு நிறமாக கலந்து இருந்தன .
மேலும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அலுவலர்கள் முன்னாள் அ.தி.மு.க அமைச்சரின் உத்தரவின் பேரில் செயல்பட்டுள்ளார்கள். தொடர்ந்து செல் பேசியில் அலுவலர்கள் தொடர்பில் இருந்து வந்துள்ளார்கள் .
குறிப்பாக என்னை தோற்கடிக்க வைக்க ஆளும் கட்சியை சேர்ந்த சிலரும் . முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஜி.ரமேஷ் சில ரவுடி ஆட்களுடன் சேர்ந்து வாக்கு எண்ணிக்கை மையத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு எனது வெற்றிக்கணியை தட்டி பறித்துள்ளார்கள் . அதற்கு அலுவலர்கள் உடந்தையாக செயல்பட்டுள்ளனர் என பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து நடவடிக்கை கோரியிருக்கிறார். .