நலவாரிய உதவிகளை வழங்காமல் அலைக்கழிப்பதா?அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆர்பாட்டம்!

கு.அசோக்,
வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் தமிழ்நாடு ஏஐடியுசி கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்பாட்டம் நடத்தினார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடந்த இதில் வேலூர் ராணிப்பேட்டை,திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
ஒருங்கிணைந்த மாவட்டத்தின் சார்பில் மாவட்டத்தலைவர் சங்கர் மேஸ்திரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தை ஏ.ஐடியுசி மாநிலதுணை தலைவர் தேவதாஸ் துவங்கி வைத்தார்.
கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்களுக்கு நலவாரியம் மூலம் தனி நிதியம் ஏற்படுத்தி நலத்திட்ட உதவிகளை நலவாரிய உதவிகளையும் வழங்காமல் அலைகழிக்கின்றனர்.
அதனை உடனே வழங்க வேண்டும் கட்டுமான தொழிலாளர்களுக்கு மாதம் 6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் பெண் தொழிலாளர்கள் ஓய்வு பெறும் வயதை 50 வயதாக மாற்றியமைக்க வேண்டும் பேறுகாலம் 6 மாதங்கள் விடுப்பு வழங்கி சம்பளம் வழங்க வேண்டும் கட்டுமான தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி மற்றும் மருத்துவகாப்பீடு வழங்க வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று பெற்று வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் என்ற திட்டத்தை கைவிட வேண்டும் குழந்தைகளுக்கு கல்வி கற்க முழு செலவையும் வாரியமே ஏற்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது.