திமுக எம்.பிக்கு தூண்டில் போடும் பா.ஜ.க.! சூரியனைப் பார்த்து நாய்கள் குலூப்பதாக எம். பி. ட்விட்!

திமுக எம்.பிக்கு தூண்டில் போடும் பா.ஜ.க.! சூரியனைப் பார்த்து நாய்கள் குலூப்பதாக எம். பி. ட்விட்!

 ம.பா.கெஜராஜ்,

  'சேலம் மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் அரசு நிகழ்ச்சிகளுக்கு தொகுதி எம்பி என்ற முறையில்கூட மாநகராட்சி ஆணையர் தமக்கு அழைப்பு விடுப்பதில்லை. அவரது எச்சரிக்கையையும் மீறி தனக்கு அழைப்பு விடுக்கும் அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள்' என்று எம்பி பார்த்திபன் அண்மையில் வெளியிட்ட ட்விட்டர்  பதிவு அவர் மீது பா.ஜ.க.வின் பார்வை படும்படி ஆகிவிட்டது.  

இது பற்றின முழு விவரம் வருமாறு,

  திமுக எம்எல்ஏவான பனைமரத்துப்பட்டி ராஜேந்திரனுக்கும் திமுக எம்பி பார்த்திபனுக்கும் ஏழாம் பொருத்தம்.

இது காலப்போக்கில் உட்கட்சி மோதலாகவே மாறிவிட்டது.

 இதை சேலம் மாவட்ட திமுக பொறுப்பாளரான அமைச்சர் கே.என்.நேரு கண்டுகொள்ள முயன்ற போது ராஜேந்திரன் அதற்கு முட்டுகட்டை போட்டிருக்கிறார்.

  இந்த விவகாரம் தலைமையின் பார்வைக்கு முன்வைக்கப்பட்டது. அவரோ  பார்தீபன், எம்பி,  ராஜேந்திரன் எம்எல்ஏ மற்றும் அரசு அதிகாரிகள்மாகியோரை ஒருபிடி பிடித்திருக்கிறார்.ஸ்

 அதன் பின்னர் தமது ட்விட்டர் பதிவை நீக்கிய எம்பி பார்த்திபன், சமரச ட்விட்டர் பதிவை சில தினங்களுக்கு முன் வெளியிட்டிருந்தார்.

  சரி இத்துடன் பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது என் சேலம் மாவட்ட திமுக எம்பிக்கள் ரிலாக்ஸ் ஆகியிருந்த நிலையில், மீண்டும் அவர்களை டென்ஷன் ஆக்கும் விதத்தில் ட்விட்டர் பதிவு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார் பாஜக மாநில தகவல் தொழில்நுட்பப்பிரிவு தலைவர் நிர்மல் குமார்.

 அதில்  'சட்டுபுட்டுனு ஒரு நல்ல முடிவை எடுங்க விரைவில் தேசப்பணி சிறக்க வாழ்த்துக்கள் !' என்று நிர்மல் குமாரின் இந்த ட்விட்டர் பதிவு, திமுக உட்கட்சி பூசலை முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு சமாதானம் செய்த பிறகும், பார்த்திபன் கட்சி மாறும் எண்ணத்தில் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி உள்ளது.

  பாஜகவால் தமக்கு ஏற்பட்டுள்ள இந்த சங்கடத்துக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், 'சூரியனைப் பார்த்து நாய்கள் குலைத்துக் கொண்டே இருக்கிறது. வதந்திகளுக்கு இதுவே என் பதில்' என்று ட்வீட் செய்துள்ளார் பார்த்திபன்.