கனிமக்கொள்ளை:-கோடிகளில் லஞ்சம்-திணறும் கன்னியாகுமரி & பொள்ளாச்சி!

சபரி.ஈஸ்வரன்,
. தமிழகத்தின் கன்னியாகுமரி மற்றும் பொள்ளாச்சி ஆகிய பகுதிகளிலிருந்து தினமும் கனிமங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக இவை கேரள மாநில நன்மைக்காக சுரண்டப்படுகிறது.
பல கோடி ரூபாய் 'மாமூல்' பெற்றுக் கொண்டு மேற்கண்ட மாவட்ட அதிகாரிகள் கனிமவள கடத்தல் லாரிகளை பத்திரமாக வழியனுப்பி வைக்கிறார்கள்.
கேரளாவில் ஆற்றில் மணல் எடுக்கவும், பாறைகளை உடைத்து கற்கள் எடுக்கவும், தடை உள்ளது. ஆகவே அம் மாநிலத்துக்கு தேவையான கனிமவளங்கள், தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்படுகின்றன. அதுவும், 70 சதவீதம் தேவையை கோவை மாவட்டமே பூர்த்தி செய்கிறது.
கோவை மாவட்டத்தில், 2019ல் 199 குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தற்போது, 122 குவாரிகள் செயல்படுகின்றன. பொள்ளாச்சி தாலுகாவில், 26 குவாரிகள், ஆனைமலையில், 5; கிணத்துக்கடவில், 47 குவாரிகள் என, பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் மொத்தம், 78 குவாரிகள் உள்ளன.
இந்த குவாரிகளில் பெரும்பாலும், எம்.சாண்ட், பி.சாண்ட், சைஸ் கற்கள், சக்கைக்கற்கள் என, ரகம் வாரியாக உடைத்து எடுக்கப்படுகின்றன. அதில், 20 சதவீதம் உள்ளூர் கட்டுமான பணிகளுக்கும், 80 சதவீதம் கேரளாவுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன.
பொள்ளாச்சி கோட்டத்தில் இருந்து, தினமும், குறைந்த பட்சம், 600 லோடு கனிமங்கள் கேரளாவுக்கு செல்கின்றன. கனிம வளங்களை அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்ல ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி 'முறையாக அனுமதி பெற்றிருக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும்' என்பதுதான், ஐகோர்ட் தீர்ப்பு.
ஆனால் விதிகளை வியாபாரிகள் காற்றில் பறக்கவிட்டுள்ளார்கள். அதற்கு நம்ம அதிகாரிகளும் த் உணை போகிறார்கள்.
குறிப்பாக 'பர்மிட்' அளவை விட அதிகமாகவும், ஒரே 'பர்மிட்' பயன்படுத்தி பல முறையும் கனிம வளம் கடத்தப்படுகிறது.
கனிம கடத்தலில், பொள்ளாச்சி பகுதியில் மட்டும் தினமும், 15 லட்சம் ரூபாய் வீதம், மாதத்துக்கு, 5 கோடி ரூபாய் 'மாமூல்' கட்டுகிறதாம்.
அதே போல் தான் கன்னியாகுமரியிலும் கட்டுகிறார்களாம்.
அதாவது, சோதனை சாவடிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்கு என்று பாபு என்ற ஒல்லி பாபு என்பவரை கனிம வள கடத்தல் கும்பல் லஞ்ச தரகராக நியமித்துள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் கசிந்து உள்ளது. களியக்காவிளை மற்றும் கோழி விளை சோதனை சாவடிகள் வழியாக தினந்தோறும் கேரளாவுக்கு அதிக பாரம் ஏற்றி இரவு சுமார் 250 முதல் 300 கனிம வள லாரிகள் வரை கனிம வள கடத்தல்கள் நடைபெற்று வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் வெளியாகி உள்ளது. குறிப்பாக சித்திரங்கோடு பகுதியில் உள்ள கல்குவாரியில் இருந்து வெளியேறும் வாகனங்கள் குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் பகல் நேரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இரவு நேரத்தில் லஞ்ச தரகரை தொடர்பு கொண்டு அவர் போலீசாரை தொடர்பு கொண்டு அதன் பின்னர் அவர் வழிகாட்டும் விதத்தில் களியக்காவிளை அல்லது கோழி விளை சோதனைச் சாவடிகளை நடந்து கேரளாவுக்கு சென்று விடுகிறது.
மேலும், குவாரிகள் தரப்பில் இருந்து, வி.ஏ.ஓ., வருவாய் ஆய்வாளர், தாசில்தார், கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகள், லோக்கல் போலீஸ் ஸ்டேஷன், செய்தியாளர்கள் சிலர் என, அனைத்து தரப்பினருக்கும் மாதந்தோறும் மாமுல் கரெக்டாக போய் சேர்ந்துவிடுகிறதாம்.
அது சரி..,