சப்டிவிஷன் அதிகாரி மீது லஞ்ச ஒழிப்பு பிரிவில் புகார்?! ஓசியில் பங்களா...!ஓய்வா? சஸ்பெண்டா என விணா?

சப்டிவிஷன் அதிகாரி மீது லஞ்ச ஒழிப்பு பிரிவில் புகார்?! ஓசியில் பங்களா...!ஓய்வா? சஸ்பெண்டா என விணா?

ம.பா.கெஜராஜ்,

  ஒய்வு பெறும் தேதியை நெருங்கிக் கொண்டிருக்கும் ஒரு சப்டிஷன் அதிகாரி, அவருடை பதவி காலத்தில் செய்த தில்லாலங்கடி வேலைகளுக்காக விருது பெறப்போகிறாராம்?! இப்படித்தான் அவரது அலுவலகத்தில் பணியாற்றக்கூடிய சிலர் கிண்டலாக கிசு கிசுக்கிறார்கள்.

 திருப்பத்தூர் மாவட்டத்தின் மத்திய பகுதியில் உள்ள காவல் சப்டிவிஷன் ஒன்றின் மூத்த அதிகாரி இந்த மாதம் 30 ஆம் தேதி பணிநிறைவு பெறுகிறார்.

 எந்த சமாச்சாரமுமாக இருந்தாலும் 25,000/ ரூபாயை கறாராக கேட்டு பெறும் நேர்மையான? அதிகாரியான அவர் பலான மேட்டரில் கில்லாடியாம். சமீபத்தில் கூட வழக்குக்காக வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு பெண்மணியின் அழகில் சொக்கி ரிமாண்டுக்கு முன்னரே....? முயன்றாராம்.

 தமக்கு அனுசரைனையாக போக வேண்டும் என்று சேடிஸ்ட் புத்தியுடன் செயல்படும் அவர் பல பெண் அதிகாரிகளை வாடி போடி, அவள் இவள் என்றுதான் பேசுவாராம். சங்கோஜப்பட்டால், இது சொந்த ஊரின் கலாச்சாரம் என்று சாக்கு சொல்வாராம்.

 இவரது எல்லையில் தான் செயற்கை மணல் தொழில் நடக்கிறது. கோடிகளை அள்ளிக்கொட்டும் அந்த தொழிலை சம்மந்தப்பட்ட ஏரியாவின் பெண் அதிகாரி மாவட்ட காவல் அதிகாரியின் உத்தரவின் பெயரில் தடுத்து நிறுத்தி கடமையாற்றியுள்ளார். எஸ்.பி.யிடம் பாராட்டும் பெற்றார்.

  இதனால் கடுப்பான அந்த சப்டிவிஷன் அதிகாரி அந்த பெண் அதிகாரியை உயர் நீதிமன்ற பணிக்கு அனுப்புவதும், ரெஸ்ட் இல்லாமல் பணியமர்துவதமாக சேடிஸ்ட் புத்தியை வெளிப்படுத்தினார்.

 அடுத்ததாக, இவருக்கு மணல் மாமுல் பெற்று தந்துக்கொண்டிருந்த ஒரு இளம் எஸ்.ஐ. ஒருவர் கட்டிங்கில் ஏதோ சற்று குறைவாக கொடுத்திருக்கிறார். அவ்வளவுதான் கோபமான சப்டிவிஷன் அதிகாரி அந்த எஸ்.ஐ யை அழைத்து கணக்கு கேட்டுள்ளார். அதில் அவர் திருப்தியடையாததால், அவரை அருகில் உள்ள டம்மி இடத்துக்கு மாறுதல் செய்தார்.

 பதறிய அந்த எஸ்.ஐ.யோ உடனடியாக ஓடிப்போய் அந்த சப்டிவிஷன் அதிகாரிக்கு கவர் கொடுத்து கவர் செய்துவிட்டார். அப்புறம் என்ன அவர் மீண்டும் பழைய இடத்துக்கு பணியமர்த்தப்பட்டார். இப்போது பங்கு சரியாக போய் சேருகிறதாம்.

 மேலும் இந்த சப்டிவிஷன் அதிகாரி சென்னையில் பிரமாண்ட பங்களா ஒன்றை கட்டுவதற்காக இவர் பணியாற்றும் பகுதியிலிருந்து இருந்து பாலாற்று மணல், செங்கல், ஜ்ல்லி உடப்பட அனைத்தையும் அன்பளிப்பாக பெற்று அனுப்பிவைத்துள்ளார். இதற்கு லட்சுமணன் என்பவன் புரோக்கராக செயல்பட்டானாம்.

 இதன் மூலமாக,  ஒத்தை பைசாக்கூட செலவில்லாம் சக அதிகாரிகளை மிரட்டியே பங்களாவுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வசூல் செய்து அனுப்பிவைத்துள்ளார்.

 அதுமட்டுமின்றி ஒரு பள்ளிக்கூட செல்வந்தர்கள் மீது எஸ்.டி., எஸ்.டி. சட்டத்தின் கீழ் புகார் அளிக்கப்பட்டது.  ஒரு பெண் தான் அந்த புகாரை அளித்துள்ளார். இந்நிலையில் இந்த வழக்கிலிருந்து பள்ளிக்கூட முதலாளிகளை எப்படியெல்லாம் காப்பாற்ற முடியுமோ அவ்வாறெல்லாம் காப்பாற்றி அதற்காக பெரும் வெகுமதியையும் பெற்றார் என்று  சப்டிவிஷன் அதிகாரி மீது குற்றச்சாட்டு எழுந்தது. 

   இது பெரிய பிரச்சனையாக உருவெடுத்து அது ஒரு பக்கம் சட்ட ரீதியாக போய்க் கொண்டிருக்கிறது.

 மேலும், இவரது கலெக்ஷன் மேட்டர் உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்த நிலையில், வேறு மாவட்ட பாதுகாப்பு பணிக்காக கொஞ்சகாலம் அனுப்பிவைக்கப்பட்டு தற்போது மீண்டும் அவரது சப்டிவிஷனுக்கு பணிக்கு வந்துள்ளார்.

  ரகசிய போலீசாருக்கு இவர் என்னதான் சலுகைகளை செய்தாலும் கூட அவர்கள் மாவட்ட அலுவலகத்துக்கு இவற்றைப் பற்றி எல்லாம் மிகச்சரியாக தகவல்களை கொண்டு சேர்துள்ளார்களாம்.

  அதே போல் இந்த கலெக்ஷன் அதிகாரி தென் மாவட்டம் ஒன்றில் பணியாற்றிய போது இவரது கஸ்டடியில் இருந்த ஒருவர் லாக்கப்பில் கொல்லப்பட்டு விட்டார். அந்த வழக்கில் இவர் பிரதான குற்றவாளியாவார். அந்த வழக்கு தற்போது ஒரு முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது.

  ஆக இவ்வளவு நல்ல ஆபிசர் வரும் 30 ஆம் தேதி ஓய்வு பெறப்போகிறார், அவருக்கு ஏன் ஒரு விருது கொடுக்கக்கூடாது என்று உடன் பணியாற்றுபவர்கள் கலாய்க்கிறார்கள்.

  ஆனாலும் கூட  அதற்குள் அவர் சஸ்பெண்டு செய்யப்படுவார் என்று அவரால் பாதிக்கப்பட்டவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குநரகத்துக்கு ஒரு நபர் விலாவரியாக புகார் அளிக்கவுள்ளாராம்.

   எதற்கெடுத்தாலும் மான நஷ்டஈடு வழக்கு தொடருவேன் என்று கொக்கரிக்கும் இந்த திலாலங்குடி சப் டிவிஷன் அதிகாரி முதலில் அவர் மீதான வழக்குகளில் இருந்து வெளியில் வரட்டும் என்கிறார்கள்.

  அது சரி,