7 கோடிக்கு ஆடு விற்பனை! கலைகட்டிய இராணிப்பேட்டை சந்தை!

7 கோடிக்கு ஆடு விற்பனை! கலைகட்டிய இராணிப்பேட்டை சந்தை!

  கு.அசோக்,

 பக்ரீத் பண்டிகை முன்னிட்டு  இராணிப்பேட்டை வார சந்தையில் நடைபெற்ற சிறப்பு ஆட்டு சந்தையில் 7 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை போனதால் வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

 மிகப்பெரிய சந்தையாக விளங்கும் இராணிப்பேட்டை வாரச்சந்தையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் 17 ஆம் தேதியன்று  இஸ்லாமியர்கள்  கொண்டாடப்பட உள்ள பக்ரீத் குர்பானி பண்டிகையை முன்னிட்டு ஆட்டு சந்தையில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆடுகள் கொண்டுவரப்பட்டன.

 தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், என பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வெள்ளாடு, செம்மறி ஆடு, என சுமார் 5,000-க்கும் மேற்பட்ட ஆடுகளை வியாபாரிகள் கொண்டு வந்தனர்.

 இந்நிலையில் ஆடுகளை வாங்குவதற்காக ராணிப்பேட்டை மாவட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சந்தையில்  குவிந்தனர்.

  மேலும் ஆடுகளின் விலையும் அதிகரித்து காணப்பட்டதால் எடைக்கு ஏற்ப ஓரு ஆடு ரூ. 20,000 ரூபாய் முதல் அதிகபட்சமாக ரூ.1,00,000 லட்சம் வரை விலைபோனது. இது குறித்து ஆட்டு வியாபாரிகளிடம் கேட்கையில்,"பக்ரீத்  பண்டிகை வருவதால் ஆடுகளுக்கு கிராக்கி ஏற்பட்டு, விலை அதிகரித்துள்ளது.

  எனவே ஆடுகளும் அதிகளவில் விற்பனைக்கு வந்ததாக தெரிவித்தனா.¢ தொடர்ந்து பக்ரீத் பண்டிகை முன்னிட்டு நடைபெற்ற வார சந்தையில்   7 கோடி ரூபாய்க்கு மேல் அதிகமான ஆடுகள் விற்பனை நடைபெறும் என ஆட்டு சந்தை வியாபாரிகள் தகவல் தெரிவித்தனர்.