சாராய ஊறல்கள் அழிப்பு!

சாராய ஊறல்கள் அழிப்பு!

கு.அசோக்,

 வேலூர் மாவட்டத்தில் பல்வேறு மலைப்பகுதிகளில் காவல்துறையினர் சாராய ஊறல்களை அழித்தனர்.   அதில் சுமார் 1900 லிட்டர் சாராயம் மற்றும் சாராய ஊரல்கள் அழிக்கப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார்.

 வேலூர்மாவட்டம், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன்  உத்தரவின் பேரில் கள்ளச்சாராய ஒழிப்பு பணி நடந்தது.

 அந்த வகையில், குடியாத்தம் மதுவிலக்கு ஆய்வாளர் சின்னதுரை தலைமையில் சாத்கர் மலைபகுதியில் 1450 லிட்டர் சாராய ஊரல் மற்றும் கள்ளச்சாராயத்தை அழித்தனர். இதே போல்  குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் பத்மநாபன் தலைமையில் போலீசார் 110 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து குடியாத்ததை சேர்ந்த விஜயகுமார் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 மேலும், பேர்ணாம்பட்டு உதவி ஆய்வாளர் சரத்குமார் தலைமையில் 350 லிட்டர் சாராய ஊரல் மற்றும் 10 லிட்டர் கள்ளச்சாராயத்தையும் அழித்தனர்.

 வேலூர் மாவட்ட மலைபகுதிகளில் ஒரே நாளில் 1900 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் மற்றும் சாராயம் அழிக்கப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.