சாலையில் ஓடும் குடிநீர்!

ஜி.கே.சேகரன்,
இடையஞ்சாத்து பகுதியில் பாலாற்றில் இருந்து மக்களுக்கு விநியோகம் செய்யும் குடிநீர் பைப் உடைந்து பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி சாலையில் ஆறு போல் ஓடுகிறது - அதிகாரிகள் பைப் உடைப்பை சரி செய்ய மக்கள் கோருகின்றனர்.
வேலூர்மாவட்டம், அடுக்கம்பாறை அருகேயுள்ள இடையஞ்சாத்து சாலையில் பாலாற்றில் இருந்து வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் பைப் செல்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு அதிகாரிகள் பள்ளம் தோண்டினார்கள்.
அப்போது குடிநீர் பைப் உடைந்தது. இதனால் கடந்த 10 நாட்களாக அதிலிருந்து குடிநீர் வெள்ளம் போல் சாலையில் வீணாகி சென்று கொண்டிருக்கிறது.
உடனடியாக அதிகாரிகள் இதனை சரி செய்து, குடி நீர் வீணாவதை தடுக்க வேண்டும் என மக்கள் கோருகின்றனர்.