திருப்பத்தூர் இமாகுலேட் பள்ளிக்குள் நுழைந்த சிறுத்தை:- குடியிருப்பு பகுதிக்குள் தாவியதால் பீதி!

ஜி.கே.சேகரன்,

 திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மேரி இம்மாகுலேட் பள்ளியில் சிறுத்தை நுழைந்தது. அப்போது பள்ளியில் இருந்த வாட்ச்மேனை அந்த சிறுத்தை தாக்கியது. அதனால் அவரது கை உட்பட பல இடங்களில் காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

 பள்ளிக்குள் சிறுத்தை நுழைந்ததை அறிந்த வனத்துறையினர் அதனைப் பிடிக்க வலை சகிதமாக அங்கு வந்தனர். இந்நிலையில் சிறுத்தை பள்ளிக்கூடத்திலிருந்து குடியிருப்பு பகுதிக்குள் பாய்ந்து தப்பியது.

  முன்னதாக பள்ளிக்கூட நிர்வாகம் மாணாக்களை அவசர அவசரமாக வெளியேற்றினர். இந்த தகவல் நகர் முழுக்க பரவியதால் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள்  பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.

சிறுத்தையை பிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் வனத்துறையினர் எடுத்து வருகின்றனர் சிறுத்தை தாக்கிய முதியோருக்கு அரசு நிதி வழங்க ஆய்வு செய்யப்படும் என  செய்தியாளர்களுக்கு கலெக்டர் பேட்டி

 வனத்துறையினர் மற்றும் மாவட்ட காவல் துறையை தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர் இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போதுசிறுத்தையை பிடிக்கும் அனைத்து முயற்சியிலும் மாவட்ட வனத்துறையினர் 50 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர் இன்னும் கூடிய சீக்கிரத்தில் சிறுதையை பிடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மேலும் சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது ஒரு முதியவரை சிறுத்தை தாக்கி உள்ளது எனவும் மேலும் அவருக்கு அரசு சார்பில் நிதி உதவி வழங்க ஆய்வு செய்யப்படும் எனவும் கலெக்டர் கூறினார்.

மேலும் சிறுத்தையை பிடிக்க முயற்சி ஈடுபட்டு வருகின்றோம் பின்னரே சிறுத்தை எங்கிருந்து வந்தது எனவும் விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.