பட்டியல் போட்டு லஞ்சம் கேட்கும் பெண் வி.ஏ.ஓ! யாருக்கெல்லாம் பங்கோ?

ச.விஜய்,
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில், தாராபடவேடு கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கிராம நிர்வாக அலுவலராக (வி.ஏ.ஓ) காட்பாடி வட்டம். கழிஞ்சூர் பகுதியை சேர்ந்த பவிதா என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்திற்கு நாள்தோறும் சுமார் 50-க்கும் மேற்பட்ட மனுதாரர் வந்து செல்கின்றனர். அப்படி வருபவர்களுக்கு லஞ்ச பணம் கொடுத்தவர்களுக்கு மட்டும் உடனடியாக வேலையை முடித்துக் கொடுக்கப்படுதாம்.
மேற்படி வி.ஏ.ஓ. காலாம்பட்டு, திருவலம், கலசமங்கலம், தாராபடவேடு, என கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய இடங்களில் எல்லாம் இவர் மீது லஞ்ச புகார்கள் எழுந்ததாம்.
இது சம்பந்தமாக விஏஓ பவிதா பணியாற்றிய கிராம நிர்வாக அலுவலக பகுதிகளில் விசாரித்த போது உண்மை தகவல்கள் கிடைத்தது.
பொதுமக்கள் விஏஓ அலுவலகத்திற்கு பட்டா மாறுதல் செய்ய வேண்டும் என்றால் ரூ. 5000/- எனவும், கண்டிஷன் பட்டாவை அயன் பட்டாவாக மாற்ற வேண்டும் என்றால் ரூ.20,000/- எனவும், பட்டாவில் பெயர் நீக்கம் செய்ய 25 ஆயிரம். வாரிசு சான்றுக்கு ரூபாய் 5000/- பட்டா இடம் சர்வே செய்து அளந்திட, அடங்கல் சிட்டா தருவதற்கு கணிசமாக ஒரு தொகை, பெறுவதுடன் சாதி. வருமான. இருப்பிட சான்றிதழுக்கு ரூ. 500 என்பது விஏஓ பவிதாவின் விலைபுள்ளி பட்டியலாம்.
இப்படி தினசரி வருமானம் ரூ. 20,000 வரை கல்லாகட்டுவாராம். இதுல பலருக்கு பங்கு போவதாகவும் சும்மாவே சொல்கிறாராம்.
சமீப காலங்களில் அரசு அலுவலகங்களில் கையூட்டு பெற்றுக் கொண்டு சிறைக்கு சென்ற ஒரு சில அதிகாரிகளின் பட்டியலில் திருவண்ணாமலை மாவட்டம், புதுமல்லவாடி வருவாய் ஆய்வாளர் ஷாயஜிபேகம், முதியோர் உதவித்தொகை பெற பரிந்துரை செய்ய ரூ. 5000 லஞ்சம் வாங்கி கையும் காலுமாக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கினார், காங்கேயம் வட்டாட்சியர் சிவகாமி ரூ. 60.000 லஞ்சம் வாங்கி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கினார்.
விழுப்புரம் குமளம் கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் வாங்கிய வழக்கில் மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அதேபோல் திருச்சி மணப்பாறை வட்டாட்சியர் மற்றும் வாகன ஓட்டுநர் லஞ்சம் வாங்கி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கினார்கள்.
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் ஆண் அதிகாரிகள் காட்டிலும் பெண் அதிகாரிகள் அதிக லஞ்சம் வாங்கி வருவது இதிலிருந்து தெரிகிறது.
ஏன் என்றால் நகை. பணம். சொகுசு கார்கள். சொகுசு பங்களா கட்ட. வேண்டும் என்பதற்காக ஆசைப்பட்டு அதிக லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிக் கொள்கிறார்கள்.
அந்த வகையில் வேலூர் மாவட்டம். காட்பாடி வட்டத்திற்கு உட்பட்ட தாராபடவேடு விஏஓ பவிதா எப்பொழுது லஞ்ச ஒழிப்பில் சிக்குவாரோ?