பொதுவழி ஆக்கிரமிப்பு:- மீட்டுத்தர ஆட்சியரிடம் மனு!!

பொதுவழி ஆக்கிரமிப்பு:- மீட்டுத்தர ஆட்சியரிடம் மனு!!

கு.அசோக்,

 குடியாத்தம் அருகே கொல்லப்பள்ளியில் விவசாயிகளுக்கும், அருந்ததிய மக்கள் மயான பாதைக்கும் இடையூறாக கல்தூண்கள் அமைத்துள்ள தனி நபர் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்

 வேலூர்மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள கொல்லப்பள்ளி மற்றும் எஸ் மோட்டூர் பகுதியை சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களின் நிலைங்களில் விளையும் நெல்,கரும்பு,கடலைக்காய் போன்றவைகள் டிராக்டர்களில் மூட்டையாக வெளியூர்களுக்கு கொண்டு செல்வது வழக்கம்.

  அதே போல் அருகில் அருந்ததிய சமுதாய மக்களின் மயானமும் உள்ளது இந்த நிலையில் வேணுகோபால் என்பவர் அந்த வழியை அடைத்து கல்தூண்களை நட்டுள்ளார்.

 மேலும் அவர் நடத்தும் கோழிப்பண்ணையில் இறந்த கோழிகளை பொது இடத்தில் போடுவதால் சுகாதார சீர்கேடுலேற்படுகிறது.

   எனவே பொதுவழியை மீட்டுத்தர வேண்டுமெனவும் வேணுகோபால் மீது நடவடிக்கை எடுத்து நில அளவீடு செய்து மக்கள் வழியை மீட்க கோரி, வள்ளிமலை ஆதீனம் தலைமையில் பொதுமக்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர்  குமாரவேல் பாண்டியனை சந்தித்து மனு அளித்தனர்.

 மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக மக்களிடம் கூறினார்