தமிழகத்தில் 5 புதிய டிஜிபிக்கள் அறிவிப்பு! ஐ.பி.எஸ்.அதிகாரிகள் மாறுதல்!

தமிழகத்தில் 5 புதிய டிஜிபிக்கள் அறிவிப்பு! ஐ.பி.எஸ்.அதிகாரிகள் மாறுதல்!

  ஜி.எஸ்.மேத்யூராஜ்,

   தமிழகத்தில் ஏடிஜிபி அந்தஸ்த்தில் இருந்த ஐந்து ஐ.பி.எஸ்ஸதிகாரிகளுக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டிருக்கிறது.

 மேற்படி அதிகாரிகள் 90 ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச்சை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 அதுமட்டுமின்றி 11 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

 அந்த வகையில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால், காவலர் வீட்டுவசதித்துறை ஏடிஜிபி ஏ.கே.விஸ்வநாதன், உணவுகடத்தல் தடுப்புப்பிரிவு ஏடிஜிபி ஆபாஷ்குமார், சீருடைப்பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபி சீமா அகர்வால், அயல்பணியில் ஐபி ஏடிஜிபியாக இருக்கும் ஏடிஜிபி ரவிச்சந்திரன் ஆகியோர் டிஜிபிக்களாக பதவிஉயர்த்தப்பட்டனர்.

  மத்திய அரசு தமிழக அரசின் பரிந்துரையை ஒப்புக்கொண்ட நிலையில் 5 ஏடிஜிபிக்களுக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அவர்கள் அனைவரும் டிஜிபிக்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் வகிக்கும் பொறுப்புகள் அப்படியே டிஜிபி பதவியாக நிலை உயர்த்தப்பட்டு   அதே பொறுப்புகளில் தொடர்வார்கள்.

அரசின் அறிவிப்பு

 அதே போல், 5 டிஜிபிக்கள் உள்ளிட்ட 11 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

 இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.

அவர் பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு, இடமாற்றமும் அவர்கள் முன்பு வகித்த பதவியுடன்.

1.சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று சென்னை காவல் ஆணையராக தொடர்கிறார்.

  1. காவலர் வீட்டு வசதி வாரிய ஏடிஜிபி ஏ.கே.விஸ்வநாதன் பதவி உயர்வு பெற்று டிஜிபியாக அதே பொறுப்பில் தொடர்கிறார்.
  2. உணவுக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஏடிஜிபி ஆபாஷ்குமார் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று அதே பொறுப்பில் தொடர்கிறார்.
  3. மத்திய அரசின் அயல்பணியில் மத்திய உளவுத்துறை டிஜிபியாக பதவி வகிக்கும் ரவிச்சந்திரன் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று அதே பொறுப்பில் தொடர்கிறார்.

5.காவல் சீருடை பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபி சீமா அகர்வால் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று டிஜிபியாக அதே பொறுப்பில் தொடர்கிறார்.

  1. சென்னை காவல் தலைமையிட ஏடிஜிபி ஷங்கர் இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை காவல் நிர்வாக ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  2. சைபர் கிரைம் பிரிவு ஏடிஜிபியாக பதவி வகிக்கும் வெங்கட்ராமன் இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை தலைமையிட ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  3. தொழில்நுட்பப்பிரிவு ஏடிஜிபி அம்ரேஷ் புஜாரி இடமாற்றம் செய்யப்பட்டு சைபர் பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

9.மாநில குற்ற ஆவண காப்பகப் பிரிவு ஏடிஜிபி வினித் தேவ் வான்கடே இடமாற்றம் செய்யப்பட்டு தொழில்நுட்பப்பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

  1. குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் அமலாக்கப்பிரிவை கூடுதலாக கவனிப்பார்.
  2. கல்வி விடுமுறையில் இருந்து பணிக்கு திரும்பிய சிபிசிஐடி புலனாய்வுப்பிரிவு ஐஜி கபில்குமார் சரத்கர், இடமாற்றம் செய்யப்பட்டு அமலாக்கப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.