அம்மாவை அனைத்தபடி மரணித்த குழந்தைகள்! கேரளாவின் கோர மழைப்பசி!

அம்மாவை அனைத்தபடி மரணித்த குழந்தைகள்! கேரளாவின் கோர மழைப்பசி!

 உன்னிகிருஷ்ணன்,

 கேரளாவின் நிலச்சரிவு குப்பைகளுக்கு அடியில் தாய் மற்றும் மகனின் உடல்கள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கோக்காயர் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களைக் கண்டுபிடிக்க இயலும் என்ற நம்பிக்கையுடன் களம் இறங்கினர்.

  சேறும் சகதியுமாக குப்பை மேடுகளுக்குள் புகுந்ததால், மீட்புக் குழு உறுப்பினர்கள் விவரித்தபடி இது ஒரு தாங்க முடியாத காட்சியாக இருந்தது.

 மழையின் மத்தியில் குழுக்கள் குப்பைகளை தோண்டியபோது அவர்கள் மூன்று குழந்தைகளின் உடல்களைக் கண்டனர். மூவரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தனர்.

 மூன்று குழந்தைகள் ஆம்னா (7), அப்சான் (8) மற்றும் அகியான் (4) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 மீட்பு குழுவினர் மீதமுள்ள உடல்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளைத் தொடர்ந்தபோது, இதேபோன்ற நிலையில் மேலும் மூன்று உடல்களைக் கண்டனர் - ஒரு தாயும் அவரது மகனும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்தவாறு மரணத்தை தழுவியிருந்தார்கள்.

   அதே நேரத்தில் ஒரு குழந்தை அதன் தொட்டிலில் காணப்பட்டது. தாயும் மகனும் ஃபணீuசியா (28) மற்றும் அமீன் (10) என அடையாளம் காணப்பட்டனர்.

  இதே போல் தான் 2018 மற்றும் 2019ஆம் ஆண்டி கேரளா  இடிபாடுகளில் சிக்கிய இரண்டு குழந்தைகளின் உயிரற்ற உடல்கள் தங்கள் தாயின் உடலைக் கட்டிப்பிடித்தபடி இருந்தது நினைவிருக்கலாம்.

 உறவினர் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக ஃபணீuசியா மற்றும் அவரது குழந்தைகள் இடுக்கியில் உள்ள அவரது தந்தை வீட்டுக்கு வந்திருந்தனர்.

 நிலச்சரிவு அவர்களின் உயிர்களையும் வீட்டையும் பறிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, தனது வீட்டின் வளாகத்தின் வழியாக சேறும் சகதியுமாக ஓடும் நீரோடையின் வீடியோவை படம்பிடித்து, உறவினருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியதாக அதைப் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

  மொத்தம் எட்டு பேர் ஆரம்பத்தில் காணாமல் போனதாக தகவல்கள் கிடைத்தன. ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள், 55 வயதான ஷாஜியின் உடல் உட்பட ஆறு உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இறந்தவர்களின் உடல்கள் கோட்டயத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

  கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சமீபத்திய தகவலின்படி, ஆலப்புழா, கோட்டயத்தில், பத்தனம்திட்டா, இடுக்கி, எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

  ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி மாநிலத்தில் மொத்தம் 2,159 பேர் மறுவாழ்வு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மழை தொடர்பான பேரிடர்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு ரூ .4 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது.