நறுவீ மருத்துவமனையில் வலி நிவாரண கருத்தரங்கு! 50க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் பங்கேற்பு!

நறுவீ மருத்துவமனையில் வலி நிவாரண கருத்தரங்கு! 50க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் பங்கேற்பு!

Ma.ba.Gajaraj,
வேலூர் நறுவீ மருத்துவமனையில் தசைக்கூட்டு வலிக்கான மருத்துவம் பற்றிய ஒரு நாள் கருத்தரங்கம்  நடை பெற்றது. மேற்படி இந்த ஒரு நாள் கருத்தரங்கினை புதுச்சேரி அரசு இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய வலி மருத்துவ நிபுணர் டாக்டர் மதன் பாண்டியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அப்போது அவர் கருத்தரங்கு தொடர் பான மலரினை வெளியிட்டார் .  தேசிய அளவில் பல்வேறு மருத்துவமனைகளை சேர்ந்த மயக்க மருந்தியல் நிபுணர்கள் , மூட்டு வலி மருத்துவ நிபுணர்கள் மற்றும் வலி நிவாரண மருத்துவ நிபுணர்கள் என 50 - க்கும் மேற்பட்டவர்கள் இதில் பங்கேற்றனர் . கருத்தரங்கு தொடக்க விழாவிற்கு வருகை தந்தவர்களை நறுவீ மருத்துவமனை மயக்க மருந்தியல் துறை தலைவர் மற்றும் கருத்தரங்கு அமைப்பாளர் டாக்டர் சரவணன் வரவேற்று பேசினார் . நிகழ்ச்சிக்கு வேலூர் நறுவீ மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் தலைமை வகித்து குத்துவிளக்கு ஏற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தார் . இதில் கருத்தரங்கின் நோக்கம் பற்றி நறுவீ மருத்துவமனை செயல் இயக்குநர் டாக்டர் பால் ஹென்றி விளக்கி பேசினார் .   கருத்தரங்கில் பங்கேற்ற மருத்துவ நிபுணர்கள் முழங்கை , மணிக்கட்டு உடற்கூறியில் , தோள் பட்டை , முழங்கை அல்ட்ராசவுண்டு ( Ultrasound ) , தோள் பட்டை அல்ட்ராசவுண்டு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் வலி நிவாரண மருத்துவம் பற்றி பல்வேறு கருத்துக்களை பரிமாரி கொண்டனர் . இதில் , நறுவீ மருத்துவமனை தலைமை இயக்குதல் அலுவலர் மணிமாறன் , பொது மேலாளர் நிதின் சம்பத் , வலி மருத்துவ துறை தலைவர் மற்றும் கருத்தரங்கு அமைப்பாளர் டாக்டர் ஜெயசுதா , மருத்துவமனை மருத்துவர்கள் , செவிலியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்