ரவுடிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேன்டும்! வணிகர் சங்க பேரமைப்பு கோரிக்கை!

ரவுடிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேன்டும்! வணிகர் சங்க பேரமைப்பு கோரிக்கை!

கு.அசோக்,

அரசு சிறுவணிகர்களை பாதுகாத்திட சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் - வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர்  விக்கிரம ராஜா வேலூரில் பேட்டி,

  வேலூர்மாவட்டம்,வேலூரில் வணிகர் சங்க பேரமைப்பின் மூன்று மாவட்டங்களான வேலூர், இராணிப்பேட்டை திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களின் பொது குழு கூட்டமானது தலைவர் ஞானவேல் தலைமையில் நடைபெற்றது.

 இதில் பொருளாளர் அருண் உள்ளிட்ட திரளான வணிகர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர் இதில் சிறப்பு அழைப்பாளராக வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டு குருதி கொடை அதிக முறை வழங்கியவர்களை பாராட்டி விருதினையும் சான்றையும் வழங்கினா£.

¢  பின்னர் வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரம ராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில் வருகின்ற மே 5 மாநில மாநாடு 42 ஆவது மாநில மாநாடு வணிகர்களை பாதுகாக்கவும் வாழ்வுரிமை மீட்கும் மாநாடாக நடக்கும் அதில் வேலூர் மாவட்டத்திலிருந்து 15 ஆயிரம் பேர் பங்கேற்கவுள்ளனர். இதில் தமிழக முதல்வர் கலந்துகொள்வா£.

 அப்போது  கட்டிட வரி உயர்வு பல்வேறு பிரச்சணைகளை பிரகடன தீர்மானமாக எங்கள் கோரிக்கைகளை எடுத்துரைக்க உள்ளோம்.

  தமிழ்நாடு முதல்வர் சோளத்திற்கு ஒரு சதவிகித செஸ் வரியை அப்புறப்படுத்தியுள்ளதற்கு நன்றி. மத்திய மாநில அரசுகள் கார்ப்ரேட் கம்பெனிகளிடமிருந்து சிறுவணிகர்களை பாதுகாக்க வேண்டுமென்றால் அரசு முழுமையான சிறப்பு பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும்.

  இம்மாநில மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன் மற்றும் பியூஷ் கோயலை அழைத்துள்ளோம் அவர்களும் தேதி தருவதாக சொல்லியுள்ளார்கள்.

  ஜிஎஸ்டி வரி விதிப்பு உணவு பாதுகாப்பு ஆகியவைகளிலிருந்து பாதுகாக்கும் மாநாடாக இது அமையும்.

 இதை சாதாரண வணிகர் முதல் பெரு வணிகர் வரை உற்று நோக்குகிறார்கள். முதல்வர் இம்மாநாட்டில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என நம்பிக்கை உள்ளது.

  நகராட்சி பேரூராட்சி உள்ளாட்சி வாடகை விகிதத்தை குறைப்பதற்கு அமைச்சர் நேருவிடம் முறையிட்டோம் சென்னையில் வாடகை தொகை குறைக்கப்பட்டுள்ளது அதே போல் மாவட்ட வாரியாக ஆட்சியாளரிடமும் அமைச்சரிடமும் முறையிட்டோம்.

   இந்த அவகாசத்தை மார்ச்  உடன் நிறுத்திவிடாமல் 2 மாதத்திற்கு லைசன்ஸ் எடுக்க அவகாசம் நீட்டிக்க வேண்டும். லைசன்ஸ் கட்டண உயர்வையும் மறு ஆய்வு செய்து குறைக்க வேண்டும். வணிகர்கள் தொடர்ந்து ஆங்காங்கே தாக்கபடுகின்றனர் கூடுவான்ஞ்சேரியில் வணிகர் வெட்டப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் செய்தோம்.

   காவல்துறை மெத்தனமாக இருக்க கூடாது என முதல்வரை சந்தித்து வலியுறுத்தினோம்.

 போதையில் இருப்பதாக ரவுடிகள் கைதை தட்டி கழிக்கின்றனர் இரும்பு கரம் கொண்டு ரவுடிகளை ஒடுக்க வேண்டும் இதில் காவல்துறைக்கும் வணிகர் சங்க பேரமைப்பு துணை நிற்கும்.

  மத்திய பட்ஜெட்டில் தனி நபர் வருமானம் ரூ.5 லட்சத்திலிருந்து 15 லட்சமாக உயர்த்த வேண்டுமென கோரிக்கை வைத்தோம் அதில் 12 லட்சமாக அறிவித்துள்ளதற்கு வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் நன்றி.

  ஆனால் எங்களை ஏமாற்றும் பட்ஜெட்டாக தெரிகிறது பன்னாட்டு நிறுவனங்கள் வேண்டாம் என தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்தி  லுலு மாலை ஆய்வு செய்யுங்கள் உள்நாட்டு வணிகர்கள் இல்லா நிலை ஏற்படும் என கூறி வலியுறுத்தியுள்ளோம்.

  உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் அதிகாரிகள் பொருள் உற்பத்தியாகும் இடத்தில் ஆய்வு செய்ய வேண்டும்.

  ஆனால் கடை கடையாக சென்று அதிகாரிகள் தவறு செய்கின்றனர் அதனுடைய துறை அமைச்சர் தெளிவாக இருக்கின்றனர் வியாபாரிகளிடம் அதிகாரிகள் அத்துமீறல் என்றால் எங்கள் கவணத்திற்கு கொண்டு வாருங்கள் உரிய நடவடிக்கை எடுப்போம் என கூறினார்.