உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வட்டாட்சியர் காலில் விழுந்து கண்ணீர் விட்ட நபரால் பரபரப்பு!

 ஜி.கே.சேகரன்,

 உயர்நீதிமன்ற உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு நாட்றம்பள்ளி வட்டாட்சியர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் காலில் விழுந்து கதறிய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

 திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி தெக்குபட்டு பகுதியில் வண்டி வழி பாதையை ஆக்கிரமித்து உள்ளதை  அகற்றக்கோரி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றத்தை அணுகி வழக்கு தொடர்ந்தார்.

 இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் உடனடியாக வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டனர்.நானால் நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் வழக்கம் போலவே கண்டுகொள்ளவில்லை.

 இதற்கு பாடம் புகட்ட முடிவெடுத்த சிவ சக்திவேல் என்பவர் நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று  நாட்றம்பள்ளி வட்டாட்சியர் குமார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் காலில் விழுந்து கெஞ்சினார்.

 அய்யாமார்களே உயர்நீதிமன்ற உத்தரவை மதித்து ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள் என்று கதறி அழுததார்.

 இதன் பின்னரும் அந்த அலுவலர்கள் செவிமடுகவில்லை என்பது தான் ஹைலைட்.