சிலம்பம் போட்டியில் வேலூர் பசங்க 54 பதக்கங்கள்!

  கு.அசோக்,

கோவாவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் வேலூர் பசங்க 54 பதக்கங்களை அள்ளி குவித்தனர். அவர்களுக்கு மாநகர மேயர் மரியாதை செலுத்தினார்.

கடந்த 6 ஆம் தேதி முதல் எட்டாம் தேதி வரையில் இந்திய இளைஞர் கவுன்சில் சார்பில் அகில இந்திய அளவிலான சிலம்பம் போட்டிகள் கோவாவில் நடந்தது.

 இதில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். குறிப்பாக  வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ,மாணவிகள் 27 பேரும் பங்கேற்று தங்களின் திறனை வெளிப்படுத்தி 13 பிரிவுகளின் கீழ் விளையாடி 51 தங்கப்பதக்கங்களையும் இரண்டாம் இடம் வென்று 3 வெள்ளிபதக்கம் என மொத்தம் 54 பதக்கங்களை வென்றனர்.

 இளைஞர் கவுன்சில் சார்பில் அகில இந்திய அளவிலான சிலம்பம் போட்டிகளில் பங்கேற்ற வேலூர் மாணவ,மாணவிகள் 51 தங்கப்பதக்கம் 3 வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை - வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா மாணவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்.

 வேலூரில் உள்ள ஓம்ஸ் சிலம்பம் குழுமம் சார்பில், பயிற்சியாளர் விக்னேஷ் ராவுடன் 27 சென்ற மாணவ,மாணவிகள் ரயில் மூலம் காட்பாடி ரயில் நிலையம் வந்தடைந்தனர்.

 சிலம்பம் போட்டிகளில் பதக்கங்களை குவித்த தமிழக மாணவர்களை வரவேற்று அவர்களின் சாதனையை பாராட்டி வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா மாணவ,மாணவிகளை சால்வை அணிவித்து பாராட்டினார் பொதுமக்களும் பதக்கங்களை குவித்த மாணவர்களின் சாதனையை பாராட்டினார்கள்.