தற்காலிக அரங்கத்தை திறந்த வேலூர் பிஷப்!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,

வேலூர்,ஆபிசர்ஸ் லைன், சி.எஸ்.ஐ.மத்திய ஆலயத்தில் உள்ள தற்காலிக அரங்கத்தை பேராயர் ஹெ.சர்மா நித்தியானந்தம் அவர்கள் திறந்து வைத்தார்.அதில் ஆயர்கள் எஸ்.சைமன், அப்சலோம் பர்னபாஸ்,பாண்டியன்,ஐசக் மகிமைதாஸ், அமர்நாத் ஆகியோரும்,  மேலும், மத்திய ஆலயத்தில் செயலாளர் ஆன்ட்ரு சாம் ரத்தனசிங், பொருளாளர் ஜேசுவா, முன்னாள் செயலாளர்கள், டேவிட் கிருபாகரன், நீல் இன்பராஜ், ஊரிசு மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எபிநேசர், திட்ட பொருப்பாளர்கள் சுரேஷ் ரவிக்குமார், ஜான்சன் பாபு, சுரேஷ்சத்யா பாபு மற்றும் நிர்வாகக்குழுவினரும், ஆலய அங்கதினர்கள் சிலரும் பங்கேற்றனர்.

  கோவிட் 19 தொற்று தற்போது குறைந்து வருகின்றது. இருப்பினும் எதிர் காலத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், மேலும் மழை மற்றும் கோடைக் கால ஆராதணை நேரங்களில் ஆலயத்தில் ஏற்படும் இடப்பற்றாக்குறையை போக்கிடவும், சமூக பணிகளுக்காகவும் இந்த தற்காலிக அரங்கு அமைக்கப்பட்டிருக்கிறாது என்பது குறிப்பிடத்தக்கது., 

 இந்த நிகழ்வுக்குப் பின்னர் சேர்பின் பண்டிகையின் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.