தலைமை நீதிபதி மாறுதல் விவகாரம்-வழக்கறிஞர்கள் எதிர்ப்பு?

 ம.பா.கெஜராஜ்,

 சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யும் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையைச் சேர்ந்த 237 வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறாது.

 உச்ச நீதிமன்ற கொலிஜியத்தில் அங்கம் வகிக்கும் நீதிபதி என்.வி.ரமணா உள்ளிட்ட ஐந்து நீதிபதிகளுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்களாம்.

 சென்னை உயர் நீதிமன்ற தலைமையாக நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவியேற்று 10 மாதங்கள் ஆகிறது.

 இந்நிலையில், அவரது பணியிட மாற்றம் பொது நலன் அடிப்படையில் செய்யப்படுகிறதா? அல்லது சிறந்த நீதி பரிபாலனத்துக்கா என்ற கேள்விகளை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.

 சென்னை உயர் நீதிமன்றம் 75 நீதிபதிகளை கொண்ட சார்ட்டர்டு நீதிமன்றமாகும்.  ஆனால் மேகாலயா உயர் நீதிமன்றம் 2013 ஆம் ஆண்டுதான் துவங்கப்பட்டது. அப்படிப்பட்ட நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மாற்றுவதும் கேள்வியை எழுப்பியுள்ளதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  எந்த பாகுபாடும் இல்லாமல் துணிச்சலாக செயல்படும் நீதிபதியை முக்கியத்துவம் இல்லாத இடத்துக்கு மாற்றுவது என்பது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட காலத்தில் நடந்தது எனவும், இந்த மாற்றம் என்பது நீதிபதியின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி இடமாற்ற பரிந்துரையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

 அவுங்கதான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரியாச்சே ....தீர்ப்பை மாத்திச் சொல்லவா போறாங்க?