வசூரில் சமுதாய வளைக்காப்பு நிகழ்ச்சி!

கு.அசோக்,
புது வசூரில் சமுதாய வளைகாப்பு மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர், ஊராட்சி தலைவர் ஆகியோர் கர்பினி பெண்களுக்கு சீர்வரிசைகளை வழங்கினார்கள்
வேலூர்மாவட்டம், புதுவசூரில் தனியார் திருமண மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியானது
மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தலைமையில் நடந்த இதனை ஆட்சியர் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தனர்.
இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார் ஊராட்சிமன்ற தலைவர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் நூற்றுக்கணக்கான கர்பினி தாய்மார்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு வாழ்த்தி சீர்வரிசைகளும் வழங்கப்பட்டது இதில் சாதி மத பேதமின்றி அனைத்து மத பெண்களும் பங்கேற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.