கட்டிட நிறைவு சான்று இல்லாமலேயே மின் இணைப்பு பெறலாம்! கட்டுமானத்தினர் குஷி!

கட்டிட நிறைவு சான்று இல்லாமலேயே மின் இணைப்பு பெறலாம்! கட்டுமானத்தினர் குஷி!

 டி.கோபாலகிருஷ்ணன்.

 வணிக கட்டிடங்கள் எந்த அளவாக இருந்தாலும் கட்டிட பணி நிறைவு சான்றிதழ் கட்டாயம் இருந்தால்தான் மின் இணைப்பு வழங்கப்படும் என்ற நிலை தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.  இதனால் விதிமுறை மீறி கட்டப்படும் கட்டிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

  தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்திற்கு, கட்டிட நிறைவு சான்றிதழ் பெற வேண்டுமென்றால், வரைபடத்தில் உள்ள அளவில்தான் கட்டிடம் கட்டி இருக்க வேண்டும். அதில் விதிமீறல்கள் இருந்தால் பணி நிறைவு சான்றிதழ் வழங்கப்படாது. எனவே கட்டிடம் கட்டுபவர்கள் விதிகளை கடைபிடித்து வந்தனர்.

  ஆனால் அதேவேளையில் இந்தசான்றிதழ் பெறுவதில் பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுவதாக பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் எழுந்தன. குறிப்பாக லஞ்சம் இல்லாமல் வேலை நடக்காது என்கிற நிலை இருந்தது. 

   அப்படியிருக்க தமிழக அரசு, குறிப்பிட்ட சில அளவுள்ள கட்டிடங்களுக்கு இனி பணி நிறைவு சான்றிதழ் வேண்டாம் என்று அறிவித்துள்ளது.

  அந்த வகையில், 14 மீட்டர் (46 அடி) உயரம் மிகாமல் உள்ள 8 குடியிருப்பு அலகுகள் கொண்ட குடியிருப்பு கட்டிடங்கள், 750 சதுர மீட்டர் (8,073 சதுரடி) பரப்பளவிற்கு உட்பட்ட வீடு, 14 மீட்டர் (46 அடி) உயரம் மிகாமல் 300 சதுர மீட்டர் (3,230 சதுரடி) கட்டிட பரப்பளவிற்கு உட்பட்ட வணிக கட்டிடங்கள் மற்றும் (46 அடி) உயரம் மிகாமல் 300 சதுர மீட்டர் (3,230 சதுரடி) கட்டிட பரப்பளவிற்கு உட்பட்ட வணிக கட்டிடங்கள் மற்றும் அனைத்து தொழிற்சாலை கட்டிடங்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

  இதுகுறித்து மின்சார வாரியமும் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்னர் வணிக கட்டிடங்கள் எந்த அளவாக இருந்தாலும் கட்டிட பணி நிறைவு சான்றிதழ் கட்டாயம் இருந்தால்தான் மின் இணைப்பு வழங்கப்படும் என்ற நிலை தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.

  தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு கட்டிடம் கட்டுபவர்கள் வரவேற்பை தெரிவித்தாலும், சிலர் இதற்கு எதிராக பேசிவருகிறார்கள்.

 குறிப்பாக விதிகளை மீறி கட்டிடம் கட்ட்டபடுவது தொடர்பாக புகார்கள் அளித்தால் கூட அதன் மீது நடவடிக்கை எதையும் எடுப்பதில்லை. இது போன்ற சூழலில் கட்டிட நிறைவு சான்றிதழ் வழங்கினால் தான் மின் இணைப் இணைப்பு என்ற சூழ்நிலை இருந்ததால் விதிகளை மீறுவதற்கு அச்சப்பட்டனர். ஆனால் அதில் இப்போது விதி விலக்கு செய்து அறிவிக்கப்பட்டிருப்பதால் விதிமுறைகளை மீறி கட்டுமானப்பணிகள் நடைபெரும் என்பதில் அய்யமில்லை.