வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதை எதிர்க்கும் பிரச்சார பயணம்!

வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதை எதிர்க்கும் பிரச்சார பயணம்!

 ஜி.கே.சேகரன்,

   காட்பாடி வந்தடைந்தது இந்திய வங்கி ஊழியர் சம்மேளன பிரச்சார பயணம், அதில்  கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டத்துடன் பொதுத்துறை வங்கிகளை தனியாரிடம் ஒப்படைத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களுக்கு விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

 வேலூர்மாவட்டம், காட்பாடியில் உள்ள சித்தூர் பேருந்து நிலையத்தை வந்தடைந்த வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் விழிப்புணர்வு பிரச்சார பயண ஊர்தியை இந்திய பள்ளி ஆசிரியர் சங்கம் சார்பில் ஆசிரியர்கள் ஜனார்த்தனன் மற்றும் ராமமூர்த்தி ஆகியோர் வரவேற்றனா.¢

 இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின்  11வது அகில இந்திய மாநாடு ஆகஸ்ட் மாதம் 12, 13 & 14ம் தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது. இந்த அகில இந்திய மாநாட்டின் நிகழ்வாக தமிழ்நாடு முழுவதும் வாகன பிரச்சாரம் 4000 கிலோமீட்டர் தூரம் தமிழகத்தின் நான்கு முனைகளில் இருந்து திருச்சியை நோக்கி ஜூலை 19ஆம் தேதி புறப்பட்டது.

   இப்பயணம் நேற்று காட்பாடி வந்தது, இதில் முக்கிய நோக்கமாக பொதுத்துறை வங்கிகளை பாதுகாப்போம், கிராம வங்கிகளை பாதுகாப்போம்,கூட்டுறவு வங்கிகளை பாதுகாப்போம் பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாப்போம் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் வாகன பிரச்சாரம் நடைபெறுகிறது.

  இந்த பிரச்சாரத்தின் முக்கியமான நோக்கம் பொதுத்துறை நிறுவனங்கள் மக்களுக்கு எந்த அளவுக்கு நன்மை அளிக்கிறது என்று பொதுமக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், மத்திய அரசு வங்கிகளை தனியார் மையம் ஆக்க கூடாது என வலியுறுத்தியும் அவ்வாறு செய்தால் சாதாரண மக்கள் சேவை பின்னுக்கு தள்ளப்படும் வைப்பு தொகை பாதுகாப்பு இருக்காது என்பதை சுட்டிக்காட்டுகிறார்கள்.

  அதே போல் பணி இடங்கள் நிரப்பும் போது இட ஒதுக்கீடு கடைபிடிக்கபடாது சாமான்ய மக்கள் கடன் பெற முடியாது ஊழல் பெருகும் இவைகளை கரகாட்டம்,ஒயிலாட்டம்,தப்பாட்டம் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

   இதில் பிரச்சார குழு தலைவர் வங்கி ஊழியர் சம்மேளன நிர்வாகி ஹரிஹரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.