பண்புடன் வழக்கை நடத்துவதுடன் கட்சிக்காரர்களிடம் நியாயமாக செயல்பட வேண்டும்! சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பேச்சு!

பண்புடன் வழக்கை நடத்துவதுடன் கட்சிக்காரர்களிடம் நியாயமாக செயல்பட  வேண்டும்! சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பேச்சு!

ம.பா.கெஜராஜ்,

 நீதிபதிகள் முன்பு பண்புடன் வழக்கை நடத்த வேண்டும் எனவும் கட்சிக்காரர்களிடம் நியாயமாக நடக்க வேண்டும் என்றும்சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பேசினர்.

 சேலம் சென்ட்ரல் லா காலேஜில் 26 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரியின் தலைவர் த.சரவணன் தலைமையில் நடத்த இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நீதியரசர் என்.செந்தில் குமார், நீதியரசர் ஜி.அருள்முருகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.(இரண்டு நீதிபதிகளுமே இதே கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஆவார்கள்) அதேபோல் தமிழக அரசின் லீகல் ஸ்டடிசின் இயக்குனர் ஜெ.விஜயலட்சுமி ஆகியோர் பங்கேற்று பேசினார்.

 மேலும் கூடுதல் தலைமை நிர்வாக அலுவலர் எல்.சுகந்தி, தலைமை நிர்வாக அலுவலர் ஏ.மாணிக்கம் தலைவர் டி.என்.கீதா முதல்வர் டாக்டர் பேகம் பாத்திமா ஆகியோர் கலந்து கொண்டனர்.  முன்னதாக உதவி முதல்வர் சாந்தகுமாரி         அனைவரையும் வரவேற்றார்.

நீதியரசர் அருள்முருகன்

இதில் நீதியரசர் அருள்முருகன் பேசுகையில், இந்த கல்லூரியில் வழக்கறிஞர் படிப்புக்காக என்னை சேர்க்க என் தந்தை என்னை அழைத்து வந்தார். அப்போது நிறுவனர் அவர்களை பார்க்க சொன்னார்கள். தனபால் அவர்களை பார்த்த போது அவர் என்னிடம் இரண்டு கேள்விகளை அவர் கேட்டார். அது எனக்கு இன்னும் நினைவில் உள்ளது. அதில் கல்லூரியில் ஸ்டிரைக் நடந்தால் நீ தலைமை தாங்குவியா? கல்லூரி கதவு மற்றும்  ஜன்னல் கண்ணாடிகள் மீது குறிபார்த்து கல் வீசுவியா என்று கேட்டார். சார் நான் படிக்க வந்துள்ளேன் என்றதக்கு உடனே எனக்கு சீட்டு வழங்கினார். இன்றைக்கு  நான் அதே கல்லூரியில் பேச வந்துள்ளேன் அது எனக்கு பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

   வழக்கறிஞர்களாகிய நீங்கள் நீதிமன்றத்தின் மாண்பை காக்க வேண்டும். உங்களை யாரும் பார்க்கவில்லை என்று நினைக்க கூடாது. உங்களுடைய நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.

 நீங்க கோர்ட்டுக்கு வரும்போது உங்கள் வழக்கை மட்டும் கவனித்து விட்டு சென்று விடக்கூடாது, நீதிமன்றங்களில் நடக்கும் வழக்குகளை கவனிக்க வேண்டும். உங்களுடைய கட்சிக்காரர்களிடம் நியாயமாக நடக்க வேண்டும் அதேபோல் எதிர் தரப்பு வழக்கில் கடைப்பிடிப்பதிலும் ஒரு நியாயம் வேண்டும். வழக்குகளை நேர்மையுடன் நடத்த வேண்டும்.

 நாலு கேஸ் கிடைத்து ஜெயித்துவிட்டால் உடனே நம்ம பெரிய ஆள் என்று நினைத்துக் கொள்ளக்கூடாது, திரும்பிப் பார்த்தால் நீங்கள் அங்கேயே தான் இருப்பீங்க. ஆகவே வழக்குகளை ஸ்டடி பண்ணுங்க என்று பேசினார்.

 நீதியரசர் செந்தில்குமார்

 நீதியரசர் செந்தில்குமார் அவர்கள் பேசும்போது நான் சென்ட்ரல் லா காலேஜுக்கு விருந்தினராக இப்போது வந்திருக்கிற சூழலை பார்க்கும்போது ஒரு தாய்க்கும் பிள்ளைக்கும் இருக்கிற உறவாகவே கருதுகிறேன் தொப்புள் கொடி உறவு மாதிரி இருக்கிறது.

   வழக்கறிஞர் வேலை என்பது புனிதமானது. வழக்கறிஞர் ஆகிவிட்டால் நீங்கள் டாக்டராகவும் இன்ஜினியராகவும் ஆகிவிடலாம். ஒரு கொலை வழக்கு நடத்தும் போதும்,  அதேபோல் விபத்து குறித்த வழக்கு நடத்தும் போதும் அதில் இருக்கும் மருத்துவ நடைமுறைகளை நீங்கள் பின்பற்றும் பொழுது நீங்கள் மருத்துவராகிறீர்கள்.

 கட்டுமானம் தொடர்புடைய வழக்குகளில் அதைப் பற்றி நீங்கள் விவரங்களை கையில் எடுத்து ஆராயும் போது நீங்கள் இன்ஜினியர்கள் ஆகிவிடுகிறீர்கள்.

 சென்ட்ரல் லா காலேஜில் படித்தவர்கள் பலர் பல்வேறு பெரிய பதவிகளில் இருக்கிறார்கள் ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ் டிஎஸ்பி மற்றும் பல துறைகளில் முன்னணியாக இருக்கின்றனர்.

   இந்தக் கல்லூரி நிறுவனர் தனபால் அவர்கள் இங்கு படித்தவர்களில்  ஒருத்தராவது உயர்நீதிமன்ற நீதிபதிகளாக ஆகிவிட வேண்டும் என்று அவர் நினைத்ததுண்டு.இன்று நாங்கள் பலர் உயர் நீதிமன்ற நீதிபதிகளாகி இருக்கிறோம்.

அதேபோல் தற்போதைய சேர்மன் சரவணன் அவர்களுக்கு நம் கல்லூரியில் படித்தவர்கள் ஒருவராவது சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் ஆக வேண்டும் என்கின்ற ஆசை அவருக்கு இருக்கும்.  நியாயமான ஆசை. அதை நீதியரசர் அருள்முருகன் அவர்கள்  அதை நிறைவேற்றுவார் . ஏனெனில் தமிழகத்தில் உள்ள நீதியரசர்களில் இவர்தான் இளையவர்.

  இந்தக் கல்லூரியில் கல்வியை மட்டுமல்ல நல்ல ஒழுக்கத்தை கற்றுக் கொடுத்திருக்கிறார்கள் என்பதை நாம் பெருமையோடு சொல்லிக் கொள்ளலாம்.

  உண்மையிலேயே  பெரிய படிப்பு வழக்கறிஞர் படிப்பு தான். வழக்கறிஞர்கள் பண்பாக இருக்க வேண்டும். நீதிபதிகளிடம் அணுகும் போது பண்புடன் அணுக தவறினால் நல்ல வழக்கு கூட கெட்டுவிடும்.

அதேபோல் பண்போடு அணுகினால் நல்ல வழக்கு இல்லை என்றாலும் கூட நீங்கள் எதிர்பார்க்கும் உத்தரவு கிடைக்கும். ஏனென்றால் நான் வழக்கறிஞராக இருந்த போது அது மாதிரி அணுகி பல உத்தரவுகளை பெற்று இருக்கிறேன்.

   ஒவ்வொரு நீதிமன்றத்திலும் 400-500 வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள்.ஆகவே நமக்கு வழக்கு கிடைக்குமா என்று அச்சப்படக்கூடாது, சின்ன கேஸ் என்றாலும் கூட மன உறுதியோடு நடத்த வேண்டும்.வழக்குகள் இல்லாத நேரத்தில் தோல்வி பயம், அவமானம், விரக்தி ஆகியவை வரும் அவற்றை எல்லாம் கடந்து நீங்கள் நின்று விட்டீர்கள் என்றால் செல்வம், புகழ், அனைத்தும் உங்களைத் தேடி வரும். ஆகவே எந்த சூழலிலும் நம்பிக்கை இழந்து விடாதீர்கள்.   

அதேபோல வழக்கு நடத்தும் போது வழக்கு குறித்து நீதிமன்றத்தில் தப்பா சொல்லாதீங்க. பெண்கள் நிறைய பேர் லீகல் ஆபீஸராக வருகிறார்கள் வரவேற்கத்தக்கது என்று அவர் பேசினார்.

கல்லூரிதலைவர் சரவணன்

 முன்னதாக தலைமை ஏற்று பேசிய கல்லூரிதலைவர் சரவணன் அவர்கள் குறிப்பிடுகையில்,

பெற்றோர்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து மாணவர்களை இங்கு அனுப்பி வைத்தனர் நீங்கள் இன்று சட்டம் முடித்து பட்டம் பெற இந்த அரங்கில் கூடியிருக்கிறீர்கள்.

கல்லூரியில் சேரும்போது  இந்த அரங்கத்திற்குள் பெற்றோர்கள் இருந்தனர் வகுப்பறையில் மாணவர்கள் இருந்தனர் ஆனால் இன்றைக்கு வகுப்பறையில் பெற்றோர்களும் அரங்கத்தில் சட்டம் முடித்த நீங்கள் அமர வைக்கப்பட்டு இருக்கின்றனர்.

 நீங்கள்கடுமையாக உழைத்து முன்னேற வேண்டும். இங்கு சட்ட படிப்பு பட்டம் பெற்ற உங்களில் 90 சதவீதத்தினர் முதல் தலைமுறை வழக்கறிஞர்கள் ஆவீர்கள். கஷ்டப்பட்டு முதல் தலைமை வழக்கறிஞராக உங்கள் பெற்றோர்களும் கல்லூரியும் உருவாக்கியிருக்கிறது.

 கல்லூரியின் நிர்வாகி தனபால் அவர்கள் சென்ட்ரல் பின் தங்கிய கிராமத்த்தைச் சேர்ந்த பிள்ளைகள் சட்டம் படிக்கவும், பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் சட்டம் பயில வேண்டும் என்கிற அந்த நோக்கத்தோடு இந்த கல்லூரியை துவங்கினார்.  நிறுவனர் எண்ணத்திற்கு ஏற்ப கல்லூரிஃ செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

வழக்கறிஞர்களாகிய நீங்கள் எப்போதும் முகத்தை பொலிவோடு வைத்திருக்க வேண்டும். நீதிபதிகள் முகத்தைப் போல சாந்தமாக வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

 வழக்கறிஞர் பட்டம் முடித்துவிட்டு என்ரோல்மென்ட் ஆகிவிட்டவுடன், அனைத்தும் முடிந்து விட்டது அவ்வளவுதான் நாம் வழக்கறிஞர் ஆகிவிட்டோம் என்று நினைக்க கூடாது சீனியர்களை பின் பற்றி அவர்களுடைய நடவடிக்கையை கடைபிடிக்க வேண்டும். நீதிபதிகளை பின்பற்ற வேண்டும்.

 வழக்கே இல்லை என்றாலும் கூட, நீதிமன்றங்களுக்கு செல்ல வேண்டும் அப்போதுதான் ஒவ்வொரு நீதிபதியினுடை என்ன ஓட்டமும் உங்களுக்கு புரிய வரும்.

இந்தியாவைப் பொறுத்தவரை வழக்கறிஞர்கள் தான் பல்வேறு வழக்குகள் தொடுத்து பல்வேறுவற்றை சாதித்துள்ளனர்.

குறிப்பாக சொல்ல வேண்டுமானால் நீதியரசர்கள் கிருபாகரன், பார்த்தீபன் போன்றவர்கள் அளித்த உத்தரவு தான் இன்றைக்கு நீதிமன்றங்களில் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் தடுக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு பெட்டிஷன் போட்டவர் தற்போது அமர்ந்துள்ள நீதியரசரரும் அப்போதைய வழக்கறிஞருமான செந்தில்குமார் அவர்கள் ஆவார். எப் .ஐ. ஆர் இருந்தால் என்ட்ரோல் பண்ண முடியாது என்கிற நிலையை கொண்டுவந்தவர்கள் இவர்கள். ஆக பல விஷயங்களை வழக்கறிஞர்கள் தான் நீதிமன்றங்கள் வாயிலாக சாதித்து இருக்கிறார்கள்.

ஆகவே தொடர்ந்து நீதிமன்றங்களுக்கு சென்று அனைத்தையும் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

ஒரு சின்ன கதையை சொல்கிறேன்.

ஒரு யானையும் ஒரு நாயும் ஒரே நேரத்தில் கர்ப்பம் தரித்தது. நாய் மூன்று மாதங்களில் குட்டி போட்டு விட்டது மறுபடியும் ஆறு மாதம் கழித்து மறுபடியும் குட்டி போட்டது மறுபடி 9 மாதம் மறுபடியும் 12 மாதம் என்று குட்டி போட்டுக்கொண்டே இருந்தது. ஆனால் யானை குட்டி போடவில்லை, ஏனெனில் யானை 18 முதல் 20 மாதங்களுக்கு பின்னர் தான் குட்டி போடும்.

 அப்போது நாய், யானையைப் பார்த்து கேட்டது, நீ உண்மையிலேயே கர்ப்பமாக இருக்கிறாயா இல்லையா? நான் பார் இத்தனை தடவை குட்டி போட்டு விட்டேன் உனக்கு குட்டியே இல்லையே என்று கேட்டது.

பின்னர் யானை குட்டி ஈன்றது. அது யானை ஆட்டிப்படைக்கும் பலம் கொண்ட யானை அல்லவா. ஆகவே பொறுமையாக இருந்து முழுமையாக சட்டத்தை கற்றுக்கொள்ளுங்கள் என்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

பின்னர் ஒவ்வொரு மாணவ மாணவியரும் தனித்தனியே அழைக்கப்பட்டு அவர்களுக்கு சட்டச் சான்றிதழ் மற்றும் பட்டம் வழங்கப்பட்டது.

இறுதியில் உதவிப்பேராசிரியர் நிவேதா பிரியா நன்றியுரையாற்றினார்.