விளையாட்டு போட்டிகள்:- பரிசுத் தொகையை 37 கோடியாக உயர்த்திய அமைச்சர்! திருப்பத்தூர் ஆட்சியர் அறிவிப்பு!

விளையாட்டு போட்டிகள்:- பரிசுத் தொகையை 37 கோடியாக உயர்த்திய அமைச்சர்! திருப்பத்தூர் ஆட்சியர் அறிவிப்பு!

ஆர்.ரமேஷ்,

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2024-ல் பங்கேற்க இணையதள முன்பதிவினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்  திரு.உதயநிதி ஸ்டாலின்

துவக்கி வைத்தார். அதில் பரிசுத் தொகையை  விளையாட்டுதுறை அமைச்சர் 37 கோடியாக உயர்த்தியிருப்பதாக திருப்பத்தூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ஆர்.ரமேஷ்,

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றவுடன் கடந்த ஆண்டு முதல் "தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை"  விளையாட்டுப் போட்டிகள் தேசிய அளவில் நடத்தப்படும் போட்டிகளுக்கு இணையாக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.   

 அப்போட்டிகளுக்காக மொத்த பரிசுத்தொகை ரூ.25.00 கோடி உட்பட, ரூ.50.89 கோடி நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டு விளையாட்டுப் போட்டிகள் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது.

 இவ்வாண்டில் நடத்தப்பட இருக்கும் போட்டிகளில் வெவ்வேறு புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

 மேலும்,  பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டுக்கள் 53 வகைகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில  அளவிலான "தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை"  விளையாட்டுப் போட்டிகள் வரும் செப்டம்பர் மர்றும் அக்டோபர்  மாதங்களில் நடத்தப்படவுள்ளது.

 இப்போட்டிகளில் கலந்து கொள்வதற்கான விவரத்தினை https://sdat.tn.gov.in என்ற இணையதளம்  வாயிலாக முன்பதிவு செய்து அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து பதிவேற்றம் செய்திட வேண்டும்.

  மாநில அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெற்பவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்.

  குழு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ.50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக தலா ரூ.25 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட உள்ளது மற்றும் இவ்வாண்டு தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு தமிழ்நாடு அரசு முதன் முறையாக  நான்காம் இடம் பெற்றவர்க்கும் மூன்றாம் பரிசுக்கு இணையாக வழங்கிட உள்ளது.

  விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியால் இவ்வாண்டுக்கான தனி நபர் மற்றும் குழுப்போட்டிகளுக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.37 கோடியாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. இப்போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் உயர்  கல்வி  மற்றும் வேலை வாய்ப்பில் சலுகைகளும் பெற இயலும்.

  தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 12 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கும், 17 வயது முதல் 25 வயது வரை கல்லூரி மாணவர்களுக்கும், 15 வயது முதல் 35 வயது வரை பொதுப்பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் விளையாட்டுப்போட்டிகள்  நடத்தப்பட உள்ளது. போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்திட   கடைசி  நாள் 25.08.2024 ஆகும்.

  எனவே, விளையாட்டில் ஆர்வம் உள்ள அனைவரும் தவறாமல்  https://sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

  தாங்களாகவோ, தங்கள் பள்ளி, கல்லூரி மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம்.  மேலும் விவரங்களுக்கு  தமிழ்நாடு விளையாட்டு  மேம்பாட்டு ஆணையத்தின்  திருப்புத்தூர் மாவட்ட விளையாட்டு அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.

   "ஆடுகளம்" தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல்  மாலை   மணி வரை 9514000777 என்ற என்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்     திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப.அவர்கள்  தெரிவித்துள்ளார்.

 

செய்தி வெளியீடு  : செய்தி  மக்கள் தொடர்பு  அலுவலர்,  திருப்பத்தூர்  மாவட்டம்.