போதை பொருள் நடமாட்டத்தை ஒழிக்க முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!

ஜி.சாந்தகுமார்,
தமிழகத்தில் போதை பொருள் தடுப்பு தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டிய நிலையில், தமிழக அரசின் நடவடிக்கை மேலும் வேகமெடுத்துள்ளது. இதையடுத்தே, நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற இதில் தமிழகம் முழுவதும் போதைப்பொருள் நட மாட்டம் தொடர்பாகவும் மாவட்ட வாரியாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டது. கூட்டத்தில் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, முதல்வரின் செயலர் நா.முருகானந்தம், உள்துறை செயலர் அமுதா, சுகாதாரத் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி உள்பட பல துறைகளின் செயலர்கள், தமிழக டிஜிபிசங்கர் ஜிவால், கூடுதல் டிஜிபி அருண், சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
துறைவாரியாக செயல்திட்டங்களை ஒருங்கிணைத்து போதைப்பொருள் நடமாட்டம், பயன்பாட்டுக்கு எதிரானநடவடிக்கைகளைத் தீவிரப்படுத் தும்படி அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், நீதிமன்றத்தின் பாராட்டு குறித்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிகாரிகளை பாராட்டினார். அத்துடன், போதைப் பொருள் தடுப்பு அலுவலர்களுக்கு உரியபயிற்சிகளை வழங்கவும் இக்கூட்டத்தில் முதல்வர் அறிவுறுத்தினார்.
மேலும், வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், போதைப் பொருள் தடுப்பு பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவது, புதிய திட்டங்களை அறிவிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தீவிர தடுப்புபணிகளை காவல் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வரும் நிலையில், அதற்காக செயல்படும் உளவு அமைப்புகள் முழுமனதாக ஒத்துழைத்தால் தமிழகத்தில் போதை புகையிலை உள்ளிட்டவைகள் அடியோடு அழிக்கப்படும்.