மின்வசதி இல்லாமலேயே அதிக மதிப்பெண் எடுத்த மாணவி! இலவச இணைப்பு கொடுத்த முதல்வருக்கும் ஆட்சியருக்கும் நன்றி சொன்னார்!

மின்வசதி இல்லாமலேயே அதிக மதிப்பெண் எடுத்த மாணவி! இலவச இணைப்பு கொடுத்த முதல்வருக்கும் ஆட்சியருக்கும் நன்றி சொன்னார்!

க.பாலகுரு,

   மின்வசதி இல்லாமலேயே அதிக மதிப்பெண் எடுத்த மாணவி! இலவச இணைப்பு கொடுத்த ஆட்சியருக்கு நன்றி தெரித்துள்ளார்.அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு தேர்வு எழுதிய குடிசை வாழ் மாணவி 492 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார்.

 திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி பத்தூர் சிவன் கோவில் தெருவில் வசித்து வரும் மெக்கானிக் பாலா மற்றும் சுதா தம்பதியின் மகள் துர்காதேவி. ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த அந்த மாணவி பத்தாம் வகுப்பு தேர்வில் 492 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் 2 ஆம் இடத்தை பிடித்திருக்கிறார்.

 துர்காதேவி தமிழ் 96, ஆங்கிலம் 100, கணிதம் 98, அறிவியல் 100, சமூக அறிவியல் 98 என மதிப்பெண் பெற்றுள்ளார்.

 இது குறித்து மாணவி துர்கா தேவி ஊடகங்களுக்கு பேட்டியளிக்கையில், அவரது  குடிசை வீட்டை காண்பித்து இதில் தான் நாங்கள் வாழ்கிறோம்.  இதுவரை மின்சார வசதி இல்லாததால் தொடர்ந்து சார்ஜர் விளக்கு மற்றும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்தேன்.

 வீட்டிற்கு மின் வசதி கேட்டு விண்ணப்பித்துள்ள நிலையில், 3 மின்கம்பங்கள் புதிதாக போட வேண்டும் என்றும், அதற்கு 1 லட்சம் வரை செலவு ஏற்படும் என்றும் மின்துறை சார்பில் தெரிவித்து வருகின்றனர். குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் தனது தந்தையால் இவ்வளவு பெரிய தொகையை செலுத்த முடியவில்லை.

 எனவே வீட்டிற்கு மின்சார வசதி கொடுப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என முக்கிய நாளிதழ் வாயிலாக கோரிக்கை வைத்திருந்தேன்.   

 அதன் பின்னர் மாவட்ட நிர்வாகம் அரசு செலவில் எங்கள்  வீட்டிற்கு மின்சாரம் வழங்கியது. இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மாவட்ட ஆட்சியர் டி.சாருஸ்ரீ ஆகியோருக்கு மாணவி மற்றும் பெற்றோர் நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார்கள். 

குறிப்பு:-மின் இணைப்புக்கான ரூ.5 ஆயிரத்து 497 டெபாசிட் உட்பட அனைத்து செலவுகளையும் அரசே ஏற்று மின்சாரம் வழங்கியிருக்கிறது.