மூன்று மாத சம்பள பணத்தில் 231 குழந்தைகளுக்கு தீபாளி டிரெஸ்! ஜவுளிக் கடைக்கு அழைத்துச்சென்று சட்டமன்ற உறுப்பினர் அசத்தல்!

மூன்று மாத சம்பள பணத்தில் 231 குழந்தைகளுக்கு தீபாளி டிரெஸ்! ஜவுளிக் கடைக்கு அழைத்துச்சென்று சட்டமன்ற உறுப்பினர் அசத்தல்!

  கே.ஏ.ஜெகதீஸ்வரி,

இராஜபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.தங்கப்பாண்டியன் அவர்கள் பொன்னகரத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் மற்றும்  மருதுநகரில் உள்ள லைட் ஆஃப் லைஃப் குழந்தைகள் காப்பகம் மற்றும் சேத்தூரில் உள்ள அருளோதயம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் என 3 காப்பகத்தில் உள்ள 231 ஆதரவற்ற குழந்தைகளுக்கு தீபாளி புத்தாடை வாங்கிக்கொடுத்து அசத்தினார்.

   கடந்த ஆறு வருடங்களாக  தீபாவளிக்கு புத்தாடை வழங்குவது போல் தற்போதும் 7வது முறையாக அக் குழந்தைகளை இராஜபாளையம் ஆனந்தம் சில்க்ஸ் ஜவுளி கடைக்கு  அழைத்து சென்று அவரது 83,84,85 வது மாத ஊதியத்திலிருந்து  ( ரூபாய் 3,15,000) ல் அக் குழந்தைகளுக்கு பிடித்தமான புத்தாடையை வாங்கிக்கொடுத்தார்.

  அவற்றை குழந்தைகளே பார்த்து பார்த்து மகிழ்ச்சியுடன் தேர்வு செய்து எடுத்தனர்.

   இந்நிகழ்வில் குழந்தைகளுடன் பேசிய சட்டமன்ற உறுப்பினர், உங்கள் எதிர்காலத்தை தீர்மானிப்பது கல்வி மட்டுமே ஆகவே அனைவரும் சிறந்தமுறையில் கல்வி கற்க வேண்டுமெனவும் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆதரவற்ற குழந்தைகளுக்கென  பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்தா£.¢ அதுபோல் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்   ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதரவாக இருந்து அவர்களின் முன்னேற்றத்தில் சிறப்பு கவனம் செலுத்தி பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து அவர்களின் வளர்ச்சிக்கு உதவிடுவார்.

   மேலும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும் விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர் பெருமக்கள் கே. கே. எஸ் .எஸ். ஆர். இராமச்சந்திரன் அவர்களும் தங்கம் தென்னரசு   அவர்களும் இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினராகிய நானும் இராஜபாளையம் தொகுதி பொதுமக்களும் அன்றும் இன்றும் என்றும் உறுதுணையாக இருப்போம் எனக் கூறினார்,

  அதனைத்தொடர்ந்து குழந்தைகளை கவனமாக காப்பகத்திற்கு செல்லுமாறும் தீபாவளி திருநாளை அனைவரையும்போல்  மகிழ்ச்சியாக கொண்டாடிட வேண்டுமெனவும் தீபாவளி தினத்தன்று நான் உங்கள் ஆசிரமங்களுக்கு நேரில் வந்து உங்களுடன் பட்டாசு வெடித்து கொண்டாட வரவுள்ளேன் எனக்கூறினார்.

 மேலும் நீங்கள் ஆதரவற்ற குழந்தைகள் அல்ல அனைவரின் ஆதரவையும் பெற்ற குழந்தைகள் எனக்கூறி   சட்டமன்ற உறுப்பினர்வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்,

இந்நிகழ்ச்சியில்  நகர செயலாளர்(வடக்கு) மணிகண்டராஜா சேத்தூர் சேர்மன் பாலசுப்பிரமணியன் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மாரிமுத்து மற்றும் கவுன்சிலர்கள்  கழக நிர்வாகிகள் குழந்தைச்செல்வங்கள் கலந்து கொண்டனர்.