குளத்தை ஆட்டையை போட்டு விற்ற தொழிலதிபர்! அதிகாரிகளும் கூட்டு! போலிசில் புகார் அளிக்க முடிவு!

டி.இ.இர்பான்,
குளத்தை ஆட்டையை போட்டு விற்ற தொழிலதிபரின் தில்லாலங்கடிக்கு அதிகாரிகளும் கூட்டு, இந்நிலையில் போலிசில் புகார் அளிக்க முடிவு பாஜகவினர் முடிவெடுத்திருக்கிறார்கள்.
இராணிப்பேட்டை மாவட்டதில் உள்ள வாலாஜா நகரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கென அமைக்கப்பட்டிருந்த குளத்தை தொழிலதிபர் என்கிற பேர்வழி ஆட்டையை போட்டு அதை வணிக வளாகமாக மாற்றிவிட்டார். இதில் பல லட்சங்களை பார்த்துவிட்ட அவருக்கு சார்பதிவாளர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் என பலரும் உடந்தை.
வாலாஜாவில் பிரபல தொழிலதிபராக வலம் வந்து கொண்டிருப்பவர்தான் எம்.ஆர்.பாலாஜி
இவர் பாலாஜி பில்டர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார் இவருக்கு சொந்தமாக திருமண மண்டபமும் உண்டு, எப்படிப்பட்ட சிக்கலான இடத்தையும் வாங்கி பதிவு செய்து பில்டிங் கட்டி தருவதில் சகலகலா வல்லவர் என பே சப்படும் அவர் வாலாஜா வெற்றிலைகாரத் தெருவில் வார்டு எண் 1, பிளாக் எண் 21,டவுன் சர்வே எண் 1330, குளம், அரசுக்கு சொந்தமான இடம் என்று தெரிந்திருந்ததும் அந்த இடத்தை ரூபாய்.5,50,000/-க்கு வாலாஜா சார் பதிவாளர் அலுவலகத்தில் தன்னுடைய பெயரில் பத்திரப்பதிவு செய்திருக்கிறார்.
பின்னர் மேற்படி இடத்தில் கட்டிடம் கட்டி, அதை 2023 மே 19ஆம் தேதி காவேரிப்பாக்கம் அமீர் தெருவை சேர்ந்த ராஜி என்பவரின் மனைவி வசந்திக்கு கிரைய பத்திரப்பதிவு செய்து கொடுத்திருக்கிறார்
இந்த தில்லாலங்கடி தொடர்பாக மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் புகார் செய்திருந்த பாஜக பிரமுகர் சதீஷ்குமார்யிடம் விசாரித்தபோது வாலாஜாவில் சர்க்கார் குளம் சர்வே எண் 1330 என்று பதிவு உள்ளது. நீர்நிலை என்று பதிவு இருந்தாலே பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று அரசு ஆணை உள்ளது இது தெரிந்திருந்தும் ரியல் எஸ்டேட் அதிபர் பாலாஜி சொத்தை வாங்கியும் அதை விற்றும் இருக்கிறார் இந்த செயலுக்கு அதிகாரிகளும் துணை போயிருக்கிறார்கள் இது சம்பந்தமா அதிகாரிகளிடம் புகார் கொடுத்திருக்கிறேன் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.
தொழிலதிபர் பாலாஜியிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள், அதில் நான் நிலம் வாங்கி வீட்டுமனை போட்டு விற்கவில்லை. ஏற்கனவே ஆயிரத்தெட்டு பேர் இது போல இடம் வைத்திருக்கிறார்கள் நாங்கள் ஒன்றும் புதுசாக உருவாக்கவில்லை நான் வாங்கும் போது நீர்நிலை என்று தெரியாது ஆனால் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரத்தை பதிவு செய்தனர்.
ஏற்கனவே இந்த இடத்தை வைத்திருந்தவர்கள் டாக்குமெண்ட், பட்டா வைத்திருந்தார்கள் எனக்கு இந்த இடத்தை காமராஜர் டீக்கடைக்காரர் தான் கொடுத்திருக்கிறார் என்கிறார் கூலாக.
மேற்படி பாலாஜியிடம் இடம் வாங்கிய வசந்தியின் கணவர் ராஜிடம் பேசினோம் நாங்கள் நிலம் வாங்க
பாலாஜியிடம் பேசியபோது அவர் அந்த இடத்தை நான் வாங்கி எப்படி பத்திர பதிவு செய்து கொண்டேனோ? அதேபோல உங்களுக்கும் செய்து தருகிறேன் எந்தப் பிரச்சனை வந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார்.
நாங்கள் 40 லட்சம் ரூபாய் கொடுத்து சொத்தை வாங்கினோம் அந்த இடத்தில் கட்டிடம் இருந்தது அதில் குழாய் இணைப்பு இருந்ததே தவிர மின் இணைப்பு இல்லை. அந்த இடத்திற்கு வரி செலுத்துவதற்காக நகராட்சி சென்றபோது நகராட்சி அலுவலர்கள் அது நீர் நிலை புறம்போக்கு அதற்கு வரியெல்லாம் கட்ட முடியாது என்று திருப்பி அனுப்பி விட்டனா.¢
இந்த சம்பவம் குறித்து வாலாஜா சார் பதிவாளர் வெங்கடேசனிடம் பேசியபோது நான் பத்திர பதிவு செய்யவில்லை விடுமுறையில் இருந்தேன் அந்த நேரத்தில் சார் பதிவாளர் பொறுப்பில் இருந்தவர்தான் பதிவு செய்திருப்பார் அவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்று நழுவிக்கொண்டார்.
துணைச்சார் பதிவாளர் ஜெகனிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம் அவர் வாலாஜா வெத்தலை கார தெருவில் உள்ள சர்வே எண் 1330 குளம்தான் என்று எனக்கே? தெரியவில்லை நான் சரியாக கவனிக்கவும் இல்லை இது சம்பந்தமா டாக்குமெண்ட் ரைட்டரைத்தான் கேட்க வேண்டுமென்று தனி நபரை நோக்கி கையை நீட்டினார்.
மாவட்ட பதிவாளர் வானியிடம் பேசினோம், அவர் நீர் நிலை குளம் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக புகார் வந்திருக்கிறது அதன் விவரம் பைல் பார்த்து தான் சொல்ல முடியும் மேலும் நடவடிக்கை எடுப்பது சம்பந்தமா கேட்டபோது நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கியுள்ளார்கள் பிறகுதான் நடவடிக்கை சம்பந்தமா தெரியவரும் என்றார்,
இது தொடர்பாக நியாயம் கோரி மும்முரம் காட்டும் பா.ஜ.க.வைச் சேர்ந்த சதிஷ், மேற்படி நீர் நிலையை விற்றவர், அதை வாங்கியர் மற்றும் உடந்தையாக செயல்பட்ட அலுவலர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கும் பொறுட்டு போலிசில் புகார் அளிக்க திட்டமிட்டிருக்கிறாராம்.