நகைகடனுக்கு சாதி பார்க்கும் கூட்டுறவு சங்கம்:- 2 கோடி ஊழல்!! வழக்கறிஞர் குற்றச்சாட்டு!

டி.முகமது இர்பான்,
நகைகடனுக்கு கூட சாதி பார்க்கும் கூட்டுறவு சங்கத்தில் சுமார் 2 கோடி ஊழல் நடந்திருப்பதாக வழக்கறிஞர் சரவணன் என்பவர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
காக்கங்கரை கிராம வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழலில் நட்டத்தில் இயங்கி வருகிறது. வங்கியில் பாமக அதிமுகவைச் சேர்ந்த பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள் அவர்கள் பல்வேறு வகைகளில் முறைகேடுகளில் ஈடுபட்டு உள்ளார்கள் சுமார் இரண்டு கோடி ரூபாய் வரை முறைகேடுகள் நடைபெற்றுள்ளது.
ஆட்சி மாற்றத்திற்குப் பின்பு திமுகவைச் சேர்ந்த சில முக்கியஸ்தர்கள் பெரும் தொகை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு ஆதரவளித்து ஊழலுக்கு துணை போகிறார்கள் இதனால் சுமார் 5 கிராம விவசாயிகளும் பொதுமக்களும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்
1.இதுவரை கடன் தள்ளுபடி கிடைக்கப்பெற்ற நபர்களின் விவரங்கள் வெளியிடவில்லை
2.விவசாயிகளின் பெயரில் பல லட்சங்கள் பணியாளர்களே கடன் பெற்று தள்ளுபடி பலன் அனுபவித்துள்ளார்கள்.
3.குறிப்பிட்ட கிராமத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட அரசியல்வாதிகளின் உறவினர்களுக்கு மட்டும் அதிகப்படியான கடன்கள் வழங்கப்பட்டு தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது
- விவசாய நிலமே இல்லாத நபர்களுக்கும் போலி ஆவணங்கள் மூலம் விவசாய கடன் கொடுக்கப் பட்டுள்ளது
- கடன் தள்ளுபடி பலனை அனுபவிக்க விவசாயிகளிடம் பல ஆயிரக்கணக்கில் பேரம்பேசி லஞ்சம் பெற்று உள்ளார்கள்
6.கடன் தள்ளுபடி பயனாளிகளின் பங்கு தொகை திருப்பி வழங்கப்படாமல் சுமார் 45 லட்சத்திற்கும் மேல் கையாடல் செய்துள்ளார்கள்
7.தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நபர்கள் நகை கடன் கோரினால் நகை கடன் வழங்க மறுத்துள்ளார்
8.விவசாய கடன் பெற்றவர்களிடம் முழுமையான தொகைகள் வழங்காமல் வங்கி கணக்குகளில் வைத்து அலைக்கழித்து வருகிறார்கள்
9.தணிக்கையில் ஊழல்கள் குறித்து வெளிவந்தன அந்த தகவல்களை மறைப்பதற்காக சில அரசியல்வாதிகள் பல லட்சம் பேரம் பேசி உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன
10.தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் வழங்க மேல்முறையீட்டு அலுவலர் உத்தரவு பிறப்பித்தும் தகவல்களை வழங்க மறுப்பதன் நோக்கம்.
ஊழலற்ற ஆட்சியில் திருப்பத்தூர் தொகுதியில் கடந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழல் வாதிகளுக்கு ஆதரவாக மக்கள் பிரதிநிதிகள் ஆதரவளித்து வருவது வேதனை அளிப்பதாக உள்ளது.
ஆட்சிக்கு நற்பெயர் ஏற்படுத்தும் வகையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதை ஒரு சிலர் ஊக்குவிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.
இது தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விவசாயிகளை ஒன்று திரட்டி காக்கங்கரை கூட்டுறவு சங்க வங்கியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்று சொல்லியிருக்கிறார் வழக்கறிஞர் சரவணன்.