பாதையில்லா பள்ளிக்கூடம்:- டேஞ்சர் சோன்!

பாதையில்லா பள்ளிக்கூடம்:- டேஞ்சர் சோன்!

செ.துரைராஜ்,

வேலூர் மாவட்டம், வேலூரை அடுத்துள்ள ஓட்டேரி பகுதியில் செவன்த் டே என்கிற பள்ளி செயல்பட்டு வருகிறது.

பல கிலோ மீட்டர் தொலைவில் இருந்தெல்லாம் பிள்ளைகள் வந்து இங்கு பயில்கிறார்கள்.

அப்படியிருக்க அந்த பள்ளிக்கு வந்து செல்லும் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை.

குறிப்பாக அதற்கான சாலை குண்டும்,குழியுமாக உள்ளது.

 அந்த பாதையில் எதிர் எதிரே வண்டிகள் செல்ல முடியாது. அதே போல் பக்கவாட்டில் தண்ணிர் குட்டைகள் உள்ளது.

பாம்புகளுக்கு பஞ்சமே இல்லை.

 இதையெல்லாம் அறிந்த உள்ளாட்சி பிரமுகர்கள் வேடிக்கை பார்க்கின்றனரே தவிர சமூக அக்கறையோடு அந்த குறைபாடுகளை சீர் செய்யவேண்டுமென்ற எண்ணம் அவர்களுக்கு இல்லவேயில்லை.