கழுதைப்பாலை குழந்தைகளுக்கு தர வேண்டாம்! கலெக்டர் வேண்டுகோள்!

ஆர்.ரமேஷ்,
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழாவை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., அவர்கள் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்கள்.
அதனை தொடர்ந்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா மடிப்பேடுகளையும், 10 கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் தாய்ப்பாலூட்டுதலை ஊக்குவிப்போம் கற்பிப்போம், ஆதரவளிப்போம் - பிறந்த குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் தேவையான ஊட்டச்சத்துகள் தாய்ப்பாலில் மட்டுமே சாதவிகிதத்தில் அமைந்துள்ளன. தாய்ப்பால் கொடுப்பது தாயின் உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. குழந்தையின் சிறப்பான ஆரோக்கியமான வளர்ச்சி, மேம்பாடு மற்றும் உடல் நலத்திற்காக பிறந்தது முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.
ஆறு மாதத்திற்கு பிறகு தாய்ப்பாலுடன் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாதுகாப்பான கூடுதல் உணவு கொடுக்கப்பட வேண்டும். இவ்வாறு தாய்ப்பால் மற்றும் கூடுதல் உணவு முறையாக பெற்ற குழந்தைகள் குள்ளத்தன்மை, மெலிவுத்தன்மை எடைக்குறைபாடு போன்ற ஊட்டச்சத்து குறைபாடில்லாத ஆரோக்கியமான குழந்தையாக வளருவர்.
குழந்தையின் வாழ்நாள் முழுமைக்குமான ஆரோக்கியம் மற்றும் அறிவு வளர்ச்சிக்கு முதல் ஆயிரம் நாட்களில் வழங்கப்படும் ஊட்டச்சத்தே அடித்தளமாகும். எனவே முறையான கர்ப்பகால பராமாரிப்புடன் குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
தாய்ப்பால் குழந்தைக்கு முதல் தடுப்பு மருந்து. எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவு. இதில் அனைத்து ஊட்டச்சத்துகளும் உள்ளது. கண்பார்வைக்குத் தேவையான வைட்டமின்-ஏ சத்து நிறைந்துள்ளது.
தாய்பாலில் முதலில் வெள்ளை அணுக்கள், வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை போன்ற நோய்த் தொற்றுகளைத் தடுக்கின்றன. குழந்தை இறப்பு விகிதத்தை குறைக்கிறது.
பின்னர் எங்கள் மருத்துவமனையில் மகப்பேறு சேவைகளில் கலந்து கொள்ளும் அனைத்து தாய்மார்களுக்கும் தாய்ப்பால் கொடுப்பதை தீவிரமாக ஆதரிக்க நான் உறுதியளிக்கிறேன்.
எங்கள் மருத்துவமனையில் தாய்ப்பால் கொடுப்பதை பாதுகாக்கவும், வாக்குவிக்கவும், ஆதரிக்கவும் என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்வேன்.
தாய்ப்பால் தவிர பிற திரவங்கள் (மாட்டுப்பால், பால்பவுடர், தேன் சர்க்கரை தண்ணீர், கழுதைப்பால் மற்றும் பிற) தருவதை எங்கள் மருத்துவமனையில் கடுமையாக எதிர்ப்போம்.
தாய்மார்கள் அவற்றை குழந்தைகளுக்கு வழங்குவதையும் தடுப்போம் என்பதையும் கூறுகிறோம். பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுப்பதைத் தொடங்குவதற்கும், தோலுடன் தோல் தொடர்பு கொள்வதற்கும். அனைத்து தாய்மார்களும் ஆதரவளிப்பதை நான் உறுதி செய்வேன்.
சுகப்பிரசவம் மற்றும் சிசேரியன் பிரசவங்களில் தாய்மார்கள் மருத்துவமனையில் தங்கயிருக்கும் போது தாய்ப்பால் கொடுப்பதை ஆதரிப்பதை நான் உறுதி செய்வேன் என்ற உலக தாய்ப்பால் வார விழா 2022 உறுதிமொழியை அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இ.வளர்மதி, தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி) திரு.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட சமூக நல அலுவலர் மற்றும் மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம்) திருமதி.ஸ்டெல்லா, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் திருமதி.சக்திசுபாஷினி, திருமதி.செல்வி, திருமதி.கலைச்செல்வி, போஷன் அபியான் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பலர் உள்ளனர்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர்.