இறந்துவிட்டதாக கூறி ஓ.ஏ.பி.யை நிறுத்திய புத்திசாலி அதிகாரிகள்! கண்ணீர்விட்டு அழுத மூதாட்டி!

இறந்துவிட்டதாக கூறி ஓ.ஏ.பி.யை நிறுத்திய புத்திசாலி அதிகாரிகள்! கண்ணீர்விட்டு அழுத மூதாட்டி!

 ம.பா.கெஜராஜ்,

  முதியோருக்கான உதவித்தொகையான ஒரு மூதாட்டி உயிரோடு இருக்கும் போதே அவரை இறந்துவிட்டதாக கூறி உதவித்தொகையை  அதிகாரிகள் நிறுத்திவிட்டனர்ர்.

  இந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்துள்ளது.

   இது குறித்து சம்மந்தப்பட்ட மூதாட்டி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் வந்து புகார் கொடுத்த்தார்.

 விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே ரவணம்பட்டு கிராமத்தை சேர்ந்த முனுசாமி என்பவரின் மனைவி முனியம்மாள் (80). இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஒரு புகார் மனு அளித்தார்.

  அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, "எனது கணவர், மகன் ஆகியோர் இறந்து பல ஆண்டுகள் ஆகிறது. தனியாக வசிக்கும் நான் கடந்த 2009-ஆம் ஆண்டில் இருந்து அரசு வழங்கும் முதியோர் உதவித்தொகை பெற்று வந்தேன். செஞ்சியில் இருந்து மேல்மலையனூர் தாலுகா தனியாக மாற்றப்பட்ட பிறகு அடிக்கடி எனது உதவித்தொகையை நிறுத்தினார்கள்.

   முதல் முறை வங்கி கணக்கு தவறு என்றும், 2-ஆவது முறை ஆதார் தவறு என்றும் தற்போது நான் இறந்து விட்டதாகவும் தாலுகா அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார்கள்.

  இதுகுறித்து அவலூர்பேட்டை கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று கேட்டபோது உங்களுடைய இறப்பு இல்லை என்றும், அந்த உதவித்தொகை எண் வேறு என்றும் கூறுகிறார்கள்.

  தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் அவலூர்பேட்டையை சேர்ந்த ஒருவர், சொந்த தாலுகாவில் பல ஆண்டுகளாக ஒரே பிரிவில் பணிபுரிகிறார்.

   அவர் இடைத்தரகர்களை வைத்துக்கொண்டு முறையாக உதவித்தொகை பெறுபவர்களை நிறுத்திவிட்டு, அந்த இடத்தில் புதியவர்களை நியமனம் செய்கிறார்.

   புதியவர்களை சேர்ப்பதால் ரூ.7,000 - ரூ.10,000 வரை கமிஷன் வரை பெறுகிறார்கள். முறையாக உதவித்தொகை வாங்கியவர்கள் பணம் வரவில்லை என்று கேட்டால் அவர்களிடமும் ரூ.3,000 வரை வசூல் செய்கிறார்கள். எனவே மாவட்ட ஆட்சியர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

 அழுதவாரே மூதாட்டி ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கிய இந்த மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தனர்.

அவ்ளோதான்.