ஆற்று நீர் கால்வாய்களை உடைத்தால் கிரிமினல் வழக்கு பாயும்! வேலூர் ஆட்சியர் எச்சரிக்கை!

ஆற்று நீர் கால்வாய்களை உடைத்தால் கிரிமினல் வழக்கு பாயும்! வேலூர் ஆட்சியர் எச்சரிக்கை!

கு.அசோக்,

 ஆறுகளில் இருந்து ஏரிகளுக்கு திருப்பிவிடப்படும் தண்ணீர் நீர்வரத்து கால்வாய்களை சேதப்படுத்துபவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கபடும் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேட்டி.

  வேலூர்மாவட்டம்,வேலூர் டோல்கேட் பகுதியில் உள்ள உழவர் சந்தையில் மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறையும் இணைந்து சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை நடத்தினார்கள்.

  இதில் விவசாயிகளும் பொதுமக்களும் ஆர்வமுடன் கலந்துகொண்டு கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டனர்.

  இதனை வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப.அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

  பின்னர் அவர்,செய்தியாளர்களிடம் கூறுகையில் ஞாயிற்று கிழமையான இன்று சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்டம் முழுவதும் 804 இடங்களில் தடுப்பூசி நடக்கிறது.

   மக்கள் ஒத்துழைப்பு அளித்து தடுப்பூசி போட்டுகொள்ள வேண்டும்.

   இன்று மாலை 7 வரை முகாம்கள் நடக்கிறது, மொத்தம்,56900 தடுப்பூசிகள் உள்ளது.

   இவைகள் அனைத்தையும் போட்டு முடித்துவிடுவோம்.

   ஆறுகளில் இருந்து தண்ணீர் ஏரிகளுக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய்கள் உடைக்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கபடும். காள்வாய்களை உடைத்தால் அவர்கள் மீது குற்றவழக்குகள் பதிவு செய்யபடும் என்று கூறினார்.