ஆண் பெண் இருவரை சஸ்பெண்டு செய்த கலெக்டர்!

ஆண் பெண் இருவரை சஸ்பெண்டு செய்த கலெக்டர்!

ஆர்.ரமேஷ்,
திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஊராட்சி ஒன்றியம், பாலூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 13.63 லட்சம் மதிப்பில் அடர்வண காடுகள் வளர்ப்பு திட்டத்தில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா இ.ஆ.ப. அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
  இந்த ஆய்வின் போது 100 நாள் வேலை பணியாளர்கள் வருகை பதிவேட்டை பணித்தளத்தில் வைக்காத காரணத்திற்காக பாலூர் ஊராட்சி செயலாளர் முரளி என்பவரையும் பணிதல பொறுப்பாளர் திவ்யா என்பவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
 இந்த ஆய்வின் வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் கரீம் சந்திரன் மற்றும் பலர் உள்ளனர்.