திருப்பத்தூர் கலெக்டர் மக்களுக்காக அதிக நேரம் சேவை செய்கிறார்:-எம்.பி. அண்ணாதுரை பேச்சு!

ஆர்.ரமேஷ்,
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மக்களுக்காக அதிக நேரம் சேவை செய்து வருகிறார் என்று திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 357 மாற்றுத்திறனாளிகளுக்கு திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.18 இலட்சத்து 02 ஆயிரத்து 597 மதிப்பிலான மூன்று சக்கர வண்டி, சக்கர நாற்காலி, நவீன செயற்கை கால், காதொளி கருவி, கைப்பேசி, போன்ற 36 வகையான உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை வழங்கினார்.
ஊனமுற்றோர் என்ற வார்த்தையை மாற்றி மாற்றுத்திறனாளிகள் என அழைக்க அரசாணை வெளியிட்டவர் கலைஞர் அவர்கள் என திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சி.என்.அண்ணாதுரை பெருமிதம் அடைந்தார்.
திருப்பத்தூர் சைவவேளாளர் திருமண மண்டபத்தில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 357 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.18 இலட்சத்து 02 ஆயிரத்து 597 மதிப்பிலான உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் க.தேவராஜி, ஏ.நல்லதம்பி, ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஆர்.பாலாஜி, அனைவரையும் வரவேற்றார்
திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை அப்போது தெரிவித்ததாவது:-
மாற்றுத்திறனாளிகள் நலன் காக்க பல்வேறு திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய இரண்டு சட்டமன்ற பகுதியில் மத்திய அரசின் நிறுவனத்தின் மூலம் தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையான உதவி உபகரணங்கள் வழங்க 24-11-2021 அன்று ஜோலார்பேட்டையிலும் மற்றும் 25-11-2021 அன்று திருப்பத்தூரிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.
அந்த முகாம்களில் கண்டறியப்பட்ட 631 தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் உதவி உபகரணங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 357 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.18,02,597/ மதிப்பில் உதவி உபகரணங்கள் இன்று வழங்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டமானது நான் மட்டும் இல்லாமல் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் இணைந்து முயற்சியின் மூலம் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டு சிறப்பாக இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. நமது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மக்களுக்காக அதிக நேரம் சேவை செய்து வருகிறார். இந்தத் திட்டத்தை கொண்டு வருவதற்கு முக்கியமான பங்கு அவருக்கு இருக்கிறது.
தென்னிந்தியாவில் உள்ள ஆறு மாநிலங்களில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் அதிகமான பயனாளிகளை தேர்வு செய்யப்பட்டு உதவி உபகரணங்கள் வழங்குவதில் தென்னிந்திய அளவில் முதலிடம் இந்திய அளவில் இரண்டாம் இடத்திலும் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி உள்ளது.
அடுத்ததாக மூத்த குடிமக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட நிர;வாகம் இணைந்து விரைவில் ஊராட்சி ஒன்றிய அளவில் முகாம்கள் நடைபெற உள்ளது.
ஒன்றிய அளவில் நடத்தப்படும் முகாம்களின் மூலம் பயனாளிகள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் எளிதாக கிடைக்கும். அரசின் சார்பில்; பலத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டாலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் மூலம் மனதிற்கு மகிழ்ச்சி மற்றும் மன நிறைவு ஏற்படுகிறது. விரைவில் மூத்த குடிமக்களுக்கான திட்டம் அறிமுகப்படுத்தி அதற்கான பயனாளிகள் தேர;வு செய்து உபகரணங்கள் வழங்க இருக்கிறோம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு கொண்டுவரும் இந்த திட்டத்தை முழுமையாக பெற்று அனைவரும் பயனடைய வேண்டும். மாண்புமிகு முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஊனமுற்றோர் என்ற வார்த்தையை மாற்றுத்திறனாளிகள் என்று அறிவித்தார்.
அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் அரசின் மூலம் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைத்து ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுகிறது. நமது மாவட்டத்தில் 13,052 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர் அதில் 5,727 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு விரைவில் அடையாள அட்டை வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் மூன்று சக்கர வண்டி, சக்கர நாற்காலி, நவீன செயற்கை கால், காதொளி கருவி, கைப்பேசி, போன்ற 36 வகையான உபகரணங்கள் வழங்கப்படுகிறது என திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர; திரு.சி.என்.அண்ணாதுரை அவா;கள் தெரிவித்தர்
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பால்வளத் தலைவர் திரு.எஸ்.இராஜேந்திரன், நகர் மன்ற தலைவர் திருமதி.சங்கீதா வெங்கடேஷ், கந்திலி ஒன்றியக்குழு தலைவர் திருமதி.திருமதிமுருகன், நகர மன்ற துணை தலைவர் திரு.சபியுல்லா, அலிம்கோ நிறுவன பிரதிநிதி திரு.நத்தீஷ், வட்டாட்சியர் திரு.சிவப்பிரகாசம், திரு.இராஜமாணிக்கம், திரு.அரசு, முடநீக்கு வல்லுனர் திரு.இனியன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திருப்பத்தூர்