லட்சம் காலிப்பணியிடங்களை தமிழக அரசு உடனே நிரப்னுமாம்!

ஜி.கே.சேகரன்,
மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் காலிப்பணியிடங்களை தமிழக அரசு உடனே நிரப்பிட வேண்டும் - தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க அகில இந்திய தலைவர் கனேசன் வேலூரில் பேட்டி
வேலூர் மாவட்டம், வேலூரில் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கத்தின் வேலூர் மண்டல கூட்டம் மாநில அமைப்பு செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாநில தலைவர் மதுரம் அகில இந்திய தலைவர் கனேசன் உள்ளிட்ட வேலூர் திருவண்ணாமலை,திருப்பத்தூர்,ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அகில இந்திய தலைவர் கனேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில் மாநிலம் முழுவதும் வருவாய்த்துறை ,அனைத்துத்துறைகளிலும் காலியாக உள்ள ஒரு லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளது.
இதனை தமிழக அரசு காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், அலுவலக உதவியாளர்கள் இரவு காவலர்கள் துப்புரவு பணியாளர்கள் சமையலர் போன்றவர்களுக்கு கல்வி தகுதிக்கு ஏற்பபதவி உயர்வு அளிக்க வேண்டும், பணி வரன் முறையும் சமையலர்களுக்கு செய்ய வேண்டும், ஆதிதிராவிடர் நலத்துறையில் ஊதிய உயர்வு வழங்கபடாமல் உள்ளது அதனை உடனே வழங்க வேண்டும்.
மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு பணி நிரந்தரம் செய்து அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் பேரூராட்சி நகராட்சி மாநகராட்சிகளில் தற்காலிக பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக சொன்னார்.